# கலைகளின் முகவரி காதல் மட்டுமே #
உலகம் நோக்கும் பல வழிப்பாதை.
உணர்ந்து பார்த்தால் ஒரு வழிப்பாதை.
வியந்து பார்க்கும் வீணர்களாலே
விவரிக்க இயலா இரு வழிப்பாதை .
உணர்ந்து பார்த்தால் ஒரு வழிப்பாதை.
வியந்து பார்க்கும் வீணர்களாலே
விவரிக்க இயலா இரு வழிப்பாதை .
அனுபவம் என்பது கடவுள் என்றான்.
அனுபவிப்பதென்பது பூசாரித்தனமோ?
வேடிக்கை வார்த்தை வேண்டவே வேண்டாம்
விபரம் சொல் விரிவாக என்றேன்.
அனுபவிப்பதென்பது பூசாரித்தனமோ?
வேடிக்கை வார்த்தை வேண்டவே வேண்டாம்
விபரம் சொல் விரிவாக என்றேன்.
திருடுவது ஒரு கலையே என்றான்
திருடி வந்து காட்டென சொன்னேன்.
கருத்துச்சங்கிலி திருடிச்சென்றதை
காலையில் வந்து திருப்பித்தந்தான்.
திருடி வந்து காட்டென சொன்னேன்.
கருத்துச்சங்கிலி திருடிச்சென்றதை
காலையில் வந்து திருப்பித்தந்தான்.
உழைப்பது ஒரு கலையே என்றான்.
உழைத்து வந்து காட்டென சொன்னேன்.
இடுப்புக்கொடி ஒன்று எடுத்து வந்தான்.
முகர்ந்ததில் தெரிந்தது உழைப்பின் வாசம்.
உழைத்து வந்து காட்டென சொன்னேன்.
இடுப்புக்கொடி ஒன்று எடுத்து வந்தான்.
முகர்ந்ததில் தெரிந்தது உழைப்பின் வாசம்.
வீரம் என்பதும் கலையே என்றான்.
வீரம் செயலில் காட்டென சொன்னேன்.
எய்ட்சில் இறந்த எதிர் வீட்டுக்காரியை
எடுத்து சென்று எரித்து வந்தான்.
வீரம் செயலில் காட்டென சொன்னேன்.
எய்ட்சில் இறந்த எதிர் வீட்டுக்காரியை
எடுத்து சென்று எரித்து வந்தான்.
சிரிப்பென்பது கலையில் சிறந்தது என்றான்.
சிரித்துக் காட்டியதில் தெரிந்து கொண்டேன்.
அழுகை என்பதும் கலையே என்றான்
அழுது காட்டினேன். துடைத்து விட்டான்.
சிரித்துக் காட்டியதில் தெரிந்து கொண்டேன்.
அழுகை என்பதும் கலையே என்றான்
அழுது காட்டினேன். துடைத்து விட்டான்.
காதல் என்பதும் கலையே என்றான்.
காதலிக்கும் எனக்கு தெரியும் என்றேன்.
காமம் என்பதும் கலையே என்றான்.
கல்யாணம் முடிந்து காட்டு என்றேன்.
காதலிக்கும் எனக்கு தெரியும் என்றேன்.
காமம் என்பதும் கலையே என்றான்.
கல்யாணம் முடிந்து காட்டு என்றேன்.
தோல்வி என்பதை கலையில் சேர்த்தான்.
ஒற்றை முத்தத்தில் ஜெயிக்க வைத்தேன்.
மகிழ்ச்சி என்பது கலையே என்றான்
மஞ்சள் கயிறு பிடுங்கி மறைத்து வைத்தேன்.
ஒற்றை முத்தத்தில் ஜெயிக்க வைத்தேன்.
மகிழ்ச்சி என்பது கலையே என்றான்
மஞ்சள் கயிறு பிடுங்கி மறைத்து வைத்தேன்.
கொள்ளை என்பது கலையே என்றான்.
இல்லை என்று சிரித்து சொன்னேன்.
இடுப்புத்தாவணி கொள்ளை போனதில்
விடிந்த பிறகே ஒத்துக் கொண்டேன்.
இல்லை என்று சிரித்து சொன்னேன்.
இடுப்புத்தாவணி கொள்ளை போனதில்
விடிந்த பிறகே ஒத்துக் கொண்டேன்.
இறப்பு என்பதும் கலையே என்பதை
எடுத்துக் காட்டி இறந்தவனே,
படைப்பு என்பது கலைதான் என்று
கருவாய் வந்து என்னில் பிறக்கிறான்.
எடுத்துக் காட்டி இறந்தவனே,
படைப்பு என்பது கலைதான் என்று
கருவாய் வந்து என்னில் பிறக்கிறான்.
அனுபவங்களின் அடையாளம்
நெற்றிச்சுருக்கம் எனில்
இரண்டு மட்டுமே எனக்கு சொந்தம்.
மூன்று முதல் ஏழு வரை
அடேய் சரவணா ................
அவை யாவும் உனக்கே சொந்தம்
நெற்றிச்சுருக்கம் எனில்
இரண்டு மட்டுமே எனக்கு சொந்தம்.
மூன்று முதல் ஏழு வரை
அடேய் சரவணா ................
அவை யாவும் உனக்கே சொந்தம்
கலைகளை காதலிக்கும்
கவிதாயினி எழில்விழி.
கவிதாயினி எழில்விழி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக