வியாழன், 18 மே, 2017

# பூத்தது பூந்தோப்பு #
என் ஏஞ்சல்
இன்று முதல்
ஏஞ்சலினா
என்று
அழைக்கப்படுவதாக.
ஆமென்.
என் பாசமுள்ள
பெண்குட்டி
இன்று முதல்
பாரிஜாத பூவாக
மாறக் கடவதாக.
ஆமென்.
என்
காவியங்களின்
கருவாச்சி
இன்று முதல்
கருப்பு வைரம்
ஆகக் கடவதாக.
ஆமென்.
என்
ஆசைகளின்
இளவரசி
இன்று முதல்
ராஜகுமாரி
ஆகக்கடவதாக
ஆமென்.
என்
நேசங்களின்
இளைய மகள்
இன்று முதல்
இன்ப மகள்
ஆகக் கடவதாக
ஆமென்.
என்
விழி முழுதும்
நிறைந்த மகள்
இன்று முதல்
என் விழிகளாய்
மாறக் கடவதாக
ஆமென்.
என் தாகங்களின்
நீருற்று
இன்று முதல்
திராட்சைக் கிணறாக
ஆகக் கடவதாக
ஆமென்.
நான்
சுமந்த சிலுவைகள்
இன்று முதல்
தெர்மோ கோல்
சிலுவைகளாக
மாறக் கடவதாக.
ஆமென்.
பாசமுடன்
கவிதாயினி எழில்விழி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக