# உள்ளம் பேசும் காதல் மொழி #
காதலின் முதல் மொழி மெளனம்
என்பதில் காதலர் எவருக்கும்
மாற்றுக்கருத்து கிடையாது.
சொல், வரி, எழுத்து வடிவம்
எதுவுமற்ற மொழியென்பதில்
மீதமுள்ளவருக்கு மறுப்பும் கிடையாது.
என்பதில் காதலர் எவருக்கும்
மாற்றுக்கருத்து கிடையாது.
சொல், வரி, எழுத்து வடிவம்
எதுவுமற்ற மொழியென்பதில்
மீதமுள்ளவருக்கு மறுப்பும் கிடையாது.
மௌன மொழிகளுக்கு
வடிவங்கள் பலவுண்டு.
கடவுளுக்கே தெரியாத
காதல் மொழி அதில் ஒன்று.
முத்தங்களின் போது மட்டும்
சிறு சத்தம் தரும் சந்த மொழியது.
வடிவங்கள் பலவுண்டு.
கடவுளுக்கே தெரியாத
காதல் மொழி அதில் ஒன்று.
முத்தங்களின் போது மட்டும்
சிறு சத்தம் தரும் சந்த மொழியது.
உதடு பேசாமல் ஒரு மொழி பேசும்.
கண்களோ பார்வையால்
பல மொழி பேசும்.
நடக்கும் நடையோ
நானூறு மொழி பேசும்.
விரல் தொடங்கி விழிமுடிய
நாலாயிரம் மொழி பேசும்.
கண்களோ பார்வையால்
பல மொழி பேசும்.
நடக்கும் நடையோ
நானூறு மொழி பேசும்.
விரல் தொடங்கி விழிமுடிய
நாலாயிரம் மொழி பேசும்.
கொட்டாங்கச்சி, குரும்பை
தொடங்கி ஆறு நாள் வயதான
தாமரை மொக்கு காட்டி - அவன்
தண்ணீரில் மூழ்கி கொள்வான்.
என் கை மார் மறைக்கும்
மாராப்பை மறுபடியும் சரி செய்யும்.
தொடங்கி ஆறு நாள் வயதான
தாமரை மொக்கு காட்டி - அவன்
தண்ணீரில் மூழ்கி கொள்வான்.
என் கை மார் மறைக்கும்
மாராப்பை மறுபடியும் சரி செய்யும்.
கோட்டை நெல் குவியலில் இருந்து
நாழி நெல்லெடுத்து
நற்குவியல் செய்து வைத்து
அவன் பார்க்கும் போதெல்லாம்,
என் பருவத்திற்கு - ஏழாயிரம்
மொழிகள் எளிதில் புரியும்.
நாழி நெல்லெடுத்து
நற்குவியல் செய்து வைத்து
அவன் பார்க்கும் போதெல்லாம்,
என் பருவத்திற்கு - ஏழாயிரம்
மொழிகள் எளிதில் புரியும்.
இரண்டு விரல்களை பின்னி காட்டும்
அவன் ஒவ்வொரு சைகையிலும் எனக்கு
இரண்டு இடங்களில் துன்ப வலியும்
இருபது இடங்களில் இன்ப வலியும்
வந்து வந்து மொழி பேசி
வரலாறு படைத்து செல்லும்.
அவன் ஒவ்வொரு சைகையிலும் எனக்கு
இரண்டு இடங்களில் துன்ப வலியும்
இருபது இடங்களில் இன்ப வலியும்
வந்து வந்து மொழி பேசி
வரலாறு படைத்து செல்லும்.
நடந்து சொல்லும் உடல் மொழியின்
நளினத்தில், நிழலில், வழியில்,
திசையில், நேரத்தில்
உணர்த்தி விடும் விசயங்கள்
காதலர்கள் எமக்கின்றி
கடவுளுக்கு கூட தெரியாது.
நளினத்தில், நிழலில், வழியில்,
திசையில், நேரத்தில்
உணர்த்தி விடும் விசயங்கள்
காதலர்கள் எமக்கின்றி
கடவுளுக்கு கூட தெரியாது.
காதல் மொழிகளால் உணர்த்தப்படுவதன்று.
காதல் பாஷைகளால் பரிபாலிப்பதன்று.
காதல் பேச்சுகளால் பேசிக்கொள்வதன்று
காதல் வார்த்தைகளால் வாசிப்பதன்று.
காதல் பாஷைகளால் பரிபாலிப்பதன்று.
காதல் பேச்சுகளால் பேசிக்கொள்வதன்று
காதல் வார்த்தைகளால் வாசிப்பதன்று.
காதல் மெளனங்களால் கரம் இணைப்பது.
காதல் சைகைளால் சாகாமல் வாழ்வது.
காதல் நேசங்களால் நேசிக்கப்படுவது.
காதல் வாசிப்புகள் இன்றி வரலாறாவது.
காதல் சைகைளால் சாகாமல் வாழ்வது.
காதல் நேசங்களால் நேசிக்கப்படுவது.
காதல் வாசிப்புகள் இன்றி வரலாறாவது.
பாஷைகளுக்கு புரியாத
பாசங்களை தெரிந்து கொள்ள,
மொழிகளுக்கு புரியாத
வழிகளை கண்டு கொள்ள ,
வார்த்தைகளின் வீரியத்தில்
வாழ்க்கையை கடந்து செல்ல,
காதலின் உச்சத்தில் யாரோ ஒருவர்
தன்னை கடவுளிடம் ஒப்புக்கொடுங்கள்'
பாசங்களை தெரிந்து கொள்ள,
மொழிகளுக்கு புரியாத
வழிகளை கண்டு கொள்ள ,
வார்த்தைகளின் வீரியத்தில்
வாழ்க்கையை கடந்து செல்ல,
காதலின் உச்சத்தில் யாரோ ஒருவர்
தன்னை கடவுளிடம் ஒப்புக்கொடுங்கள்'
ஆமாம். சரவணனைப் போல.
மெளனங்களோடு மொழிபேசும்
கவிதாயினி எழில்விழி.
கவிதாயினி எழில்விழி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக