# காதலென்பது யாதெனில் #
துரோகமென்பது யாதெனில்,
துரோணர் ஏகலைவனிடம்
துணிந்து கேட்டது.
வீரமென்பது யாதெனில்,
துரோணரிடம் ஏகலைவன்
தன் கட்டைவிரல் வெட்டி வீசியது.
தியாகமென்பது யாதெனில்,
களப்பலிக்கு காவு கொடுக்க
அரவான் தன்னையே தந்தது.
தானமென்பது யாதெனில்,
கண்ணனுக்கு கர்ணன் ரத்தத்தால்
தாரை வார்த்து கொடுத்தது.
பிச்சையென்பது யாதெனில்,
கர்ணனிடம் கண்ணன்
கையேந்தி நின்றது.
நட்பென்பது யாதெனில்,
எடுக்கவோ கோர்க்கவோ என்று
கெளரவர் தலைவன் கேட்டது.
சூட்சுமம் என்பது யாதெனில்,
சகுனியின் பகடைக்கு கண்ணன்
பாண்டவர் தலைவனை காயாக்கியது.
தருமம் என்பது யாதெனில்,
மாத்திரிக்கு மகன் வேண்டி தருமன்
சகாதேவனை உயிர்ப்பிக்க கேட்டது.
சபதம் என்பது யாதெனில்,
கெளரவர், பாண்டவர், பாஞ்சாலி
நாக்கினால் கண்ணன் நாடியது.
போரென்பது யாதெனில்,
குருச்சேத்திரக் களத்தில் கண்ணன்
கீதை சொல்லி முடித்தது.
தோல்வியென்பது யாதெனில்,
இலக்கணம் மீறிய தாக்குதலில் துரியன்
தொடை உடைத்ததில் பீமன் பெற்றது.
இனி
இந்த இதிகாச மாந்தருக்கு
இதுவரை தெரியாத ஒன்றை
சொல்லிக்கொடுப்போமா?
காதலென்பது யாதெனில்
................................
உங்களுக்கு வகுப்பெடுக்க
எனக்கு வாய்ப்பில்லை.
கண்ணா -
அவனை சற்று அனுப்பி வை.
அத்தனையும் கற்றுத்தந்து
அனுப்பி வைக்கிறோம்.
துரோணர் ஏகலைவனிடம்
துணிந்து கேட்டது.
வீரமென்பது யாதெனில்,
துரோணரிடம் ஏகலைவன்
தன் கட்டைவிரல் வெட்டி வீசியது.
தியாகமென்பது யாதெனில்,
களப்பலிக்கு காவு கொடுக்க
அரவான் தன்னையே தந்தது.
தானமென்பது யாதெனில்,
கண்ணனுக்கு கர்ணன் ரத்தத்தால்
தாரை வார்த்து கொடுத்தது.
பிச்சையென்பது யாதெனில்,
கர்ணனிடம் கண்ணன்
கையேந்தி நின்றது.
நட்பென்பது யாதெனில்,
எடுக்கவோ கோர்க்கவோ என்று
கெளரவர் தலைவன் கேட்டது.
சூட்சுமம் என்பது யாதெனில்,
சகுனியின் பகடைக்கு கண்ணன்
பாண்டவர் தலைவனை காயாக்கியது.
தருமம் என்பது யாதெனில்,
மாத்திரிக்கு மகன் வேண்டி தருமன்
சகாதேவனை உயிர்ப்பிக்க கேட்டது.
சபதம் என்பது யாதெனில்,
கெளரவர், பாண்டவர், பாஞ்சாலி
நாக்கினால் கண்ணன் நாடியது.
போரென்பது யாதெனில்,
குருச்சேத்திரக் களத்தில் கண்ணன்
கீதை சொல்லி முடித்தது.
தோல்வியென்பது யாதெனில்,
இலக்கணம் மீறிய தாக்குதலில் துரியன்
தொடை உடைத்ததில் பீமன் பெற்றது.
இனி
இந்த இதிகாச மாந்தருக்கு
இதுவரை தெரியாத ஒன்றை
சொல்லிக்கொடுப்போமா?
காதலென்பது யாதெனில்
................................
உங்களுக்கு வகுப்பெடுக்க
எனக்கு வாய்ப்பில்லை.
கண்ணா -
அவனை சற்று அனுப்பி வை.
அத்தனையும் கற்றுத்தந்து
அனுப்பி வைக்கிறோம்.
அடேய் சரவணா..........
கால இயந்திரம் ஏறி வந்து
என்னை ஒரு நொடி மட்டும்
சந்தித்து விட்டுப்போ.
காதல் என்பது யாதென்பதை
கண்ணனும் கூட கற்றுக்கொள்ளட்டும்.
கால இயந்திரம் ஏறி வந்து
என்னை ஒரு நொடி மட்டும்
சந்தித்து விட்டுப்போ.
காதல் என்பது யாதென்பதை
கண்ணனும் கூட கற்றுக்கொள்ளட்டும்.
என்றும் காதலுடன்
கவிதாயினி எழில்விழி.
கவிதாயினி எழில்விழி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக