திங்கள், 12 ஜூன், 2017

# முடிவுரையும் முகவுரையும். #

மண்ணில் என் பிரிவுக்காய்
மாந்தர் யாரும் அழ வேண்டாம்.
இருக்கும் போதுதான் அழ வைத்தேன்
இறந்த பிறகுமா?

புகழ் மலரை கொய்து
கொண்டிருந்தாயே,
இப்போதே பூச்சூடி போகிறாயே!
என்னருமை தோழி, நீ
கதறுவது என் காதுகளிலும் கேட்கிறது.

புகழ்மலரோடு இடையிடையே
காகித மலரையும்
சேர்த்துக்கொய்தேனே
தெரியாதா உனக்கு?

இவ்வளவு குறுகிய காலம்தான்
மண்ணுலகில் என் வாழ்வென்பது
முன்பேயெனக்கு தெரிந்திருந்தால்
உன் முந்தி இழுத்திருக்க மாட்டேன்.

என் வாழ்வின் பெரும் பகுதியை
உணவருந்தும்  அறையிலோ
உறங்கும் அறையிலோ
திரையரங்க கூட்டத்திலோ
கழித்திருக்க மாட்டேன்.

முக்கியமாய் மாமன்மகள் உன்
மார் பிடித்திருக்க மாட்டேன்.
பிட்டம் கிள்ளி பின்னல் இழுத்து
முத்தம் கொடுத்து முயங்கியிருக்க மாட்டேன்.

காதை கொடேன்.
காமம் கழித்த கதையொன்று சொல்ல,
ஆத்தோர குடிசைக்காரிக்கு என்
அந்தரங்கம் காட்டியிருக்க மாட்டேன்.

இத்தனையும் தெரியுமுனக்கு
இயல்பாக இருந்து கொண்டாய்.
உன்னியல்பில் தூசியேனும்
என்னியல்பில் இல்லையடி.

காதலில் நீயொரு
எழில்விழியாய் ஆனாய்,
காதலன் நான் தான்
சரவணனாய்  இல்லை.

கவிதாயினி எழில்விழி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக