திங்கள், 12 ஜூன், 2017

Sulochana Karuppuchamy

என் துயரங்களின் வடிகால்.
என் தூரங்களின் மனக்குதிரை
என் சந்தோசங்களின் சாரல் மழை.
என் ராஜ விருந்து.
என் ஆயிரம் வர்ண வானவில்
என் வாசல் 1000 புள்ளிக் கோலம்
என் குளியலறைக்கதவு.
என் பள்ளியறைப்படுக்கை .
என் மாளிகையின் ராஜவீதி.
என் ராஜ்ஜியத்தின் மும்மாரி .
என் கலைகளின் ராஜகுரு .
என் மனசாட்சியின் மெளன குரு.
என் வித்தைகளின் விதை நெல் .
என் எழுதுகோலின் இனிய முனை
என் எழுத்தின் பெண்பால் துரோணர்.
என் கட்டை விரல் வைத்த வெற்றித்திலகம்.
என் இனிய துரோகி.
என் நட்பின் முக்கனி.
என் கவிதையின் விதை
காலம் முழுதும் என்னை விதை.

எத்தனை புழக்கங்கள்
எப்படியும் இருந்தாலும்
இனியவளே
நீ
எனக்குள் இருப்பதால்
பிரிவில்லை
துயரில்லை.
ஒரு போதும் வலியில்லை.
வாழ்த்துவதில் வாழ்கிறேன்.
வாழ்நாள் இன்றென்று
என்றென்றும் வாழ்த்துகிறேன்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
சுலோச்சனா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக