திங்கள், 12 ஜூன், 2017

என் முகநூல் தோழி Udhay Rathna
அவர்களின் சகோதரருக்கு நினைவு நாள். அவரது டைம்லைனில் ஷேர் ஆப்சன் இல்லாத காரணத்தினால் Copy, paste பதிவாக.

# சக உதரம் #

4..ஆம் ஆண்டு நினைவு தினம்..

சகோதரா.
சக உதரமாய்
பிறந்தால்தான் என்னமோ
உதறியே நின்றாய்.
ஆனாலும் உணர்வில்
ஒன்றியே இருந்தாய்.

பிறப்பின் நெருக்கம்
வளர்ப்பின் வாசம்
உறவின் உருக்கம்
உள்ளத்தில் சுருக்கி மற்றவர்கள் பேசுவதை செவிசாய்த்து என்னிடம் காட்டும்
உணர்வுகளை மறைத்தாய்.

எனக்குத் தெரியும்
எருக்கம் பூக்களும்
பூசைக்கு உதவும்.
நெருஞ்சிப்பூக்களும்
மருந்துக்கு ஆகும்.

காலம் பிரித்ததை உன்
பிரிவுக்கட்டில் உணர்த்திய போது
யுகம் பல கடந்து அதை நீ உணர்ந்த போது
என் கையுன் நெஞ்சமர்த்தி
கண்கள் கலங்கிய போது
காலத்தை சபித்தோம். அந்த
கடவுளையும் சபித்தோம்.

இதோ
இன்று நீ
பிஞ்ஞகனாய் மாறி
பிறவி கடந்தாய்.
பிரபஞ்சம் தாண்டி நாங்கள்
துறவி ஆனோம்..

தாய்மைப்பேறு காலம் தாண்டியும்
தாயாய் உன்னை சுமக்கிறேன்.
மகனாய் பிறக்கும் வழி மறுத்து என்
மகளில் வந்து பிறக்கிறான்.

உருவம் மாறி அருவம் ஆகி
உணர்த்தும் காட்சி அருமை அருமை
உணர்ந்தோம் நாங்கள்
உந்தன் அன்பின் பெருமை பெருமை..

இனியொரு பிறவி இருப்பின் அண்ணா
பிறப்போம் நம் தாய் கருவில்
நான் பெரிதாக, நீ சிறிதாக.
ஏனெனில்
தமக்கையென்பவள் தாயில் பாதி
தம்பியென்பவன் மகனில் பாதி.

பிரியங்களுடன்
தங்கை..
அப்பா..
கண்ணண்..
சிந்து..
பிரவின் மற்றும் மோனிஸ்ரீ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக