# இந்த ...................... ப் போல #
பல்லாக்கு தூக்கிகளுக்கு
தோளுக்கு வலிவில்லை.
சப்பரத்தில் ஏற்றி விடலாம்.
சப்பரம் இழுப்பதற்கு
உடம்பில் தெம்பில்லை
தேரில் ஏற்றி விடலாம்.
தேர் இழுக்க ஊர் கூடும்.
முடிவில் தேரை இழுத்து
தெருவில் விட்டு விட்டு
ஊரைப் பார்க்க ஓடிப்போய்விடும்.
பாழாய் போன இந்த ........... த்தைப்போல.
தேனிக்கு உழைப்பிருக்கு
கூடு கட்டி குடியிருக்கட்டும்.
உச்சிமரத்தில் அடை கட்டட்டும்.
ஊசி போட்டு உறிஞ்சி கொள்ளலாம்.
அடையில் தேன் பிழிந்தால்
அப்படியே நக்கி கொள்ளலாம்.
நாய் பின்புறத்தில் தடவி விட்டால்
நமக்கது எதுக்காகும்.?
பாழாய் போன இந்த ........... த்தைப்போல.
ஈரை பேனாக்கி, பேனை பெருமாளாக்கி
பெருமாளுக்கு கருடனை பிடித்து கொடுத்து
உட்கார வைத்து வைகுந்தம் அனுப்பி விட்டு
செயற்கை கோளனுப்பி
வைகுந்த வாசலை மூடி வைப்போம்.
பாழாய் போன இந்த ........... த்தைப்போல.
பசிக்காத சில வயிற்றுக்கு
அஷ்ட கனிகள் அரிந்து வைப்போம்.
அதிலொன்று குறையும் என்றால்
தேடிப் பிடித்து தின்ன வைப்போம்.
வாசலில் நிற்கும் வறியவர் கூட்டத்திற்கு
காஞ்சிரஞ்காய் அவித்து கொடுப்போம்.
பாழாய் போன இந்த ........... த்தைப்போல.
அடேய் சரவணா .........
அங்கிருந்து கிளம்பி வந்து
ஆண்டைகளை நேரில் பார்த்து
பசிக்காத வயிற்றுக்கு பால்சோறும்
பசித்த வயிறுக்கு பாம்புக்கறியும்
தருவதென்ன நீதியென்று
கன்னம் அறைந்து கேட்டுச்சொல்.
பணத்தின் மீது வெறுப்பின்றி
கவிதாயினி எழில்விழி.
பல்லாக்கு தூக்கிகளுக்கு
தோளுக்கு வலிவில்லை.
சப்பரத்தில் ஏற்றி விடலாம்.
சப்பரம் இழுப்பதற்கு
உடம்பில் தெம்பில்லை
தேரில் ஏற்றி விடலாம்.
தேர் இழுக்க ஊர் கூடும்.
முடிவில் தேரை இழுத்து
தெருவில் விட்டு விட்டு
ஊரைப் பார்க்க ஓடிப்போய்விடும்.
பாழாய் போன இந்த ........... த்தைப்போல.
தேனிக்கு உழைப்பிருக்கு
கூடு கட்டி குடியிருக்கட்டும்.
உச்சிமரத்தில் அடை கட்டட்டும்.
ஊசி போட்டு உறிஞ்சி கொள்ளலாம்.
அடையில் தேன் பிழிந்தால்
அப்படியே நக்கி கொள்ளலாம்.
நாய் பின்புறத்தில் தடவி விட்டால்
நமக்கது எதுக்காகும்.?
பாழாய் போன இந்த ........... த்தைப்போல.
ஈரை பேனாக்கி, பேனை பெருமாளாக்கி
பெருமாளுக்கு கருடனை பிடித்து கொடுத்து
உட்கார வைத்து வைகுந்தம் அனுப்பி விட்டு
செயற்கை கோளனுப்பி
வைகுந்த வாசலை மூடி வைப்போம்.
பாழாய் போன இந்த ........... த்தைப்போல.
பசிக்காத சில வயிற்றுக்கு
அஷ்ட கனிகள் அரிந்து வைப்போம்.
அதிலொன்று குறையும் என்றால்
தேடிப் பிடித்து தின்ன வைப்போம்.
வாசலில் நிற்கும் வறியவர் கூட்டத்திற்கு
காஞ்சிரஞ்காய் அவித்து கொடுப்போம்.
பாழாய் போன இந்த ........... த்தைப்போல.
அடேய் சரவணா .........
அங்கிருந்து கிளம்பி வந்து
ஆண்டைகளை நேரில் பார்த்து
பசிக்காத வயிற்றுக்கு பால்சோறும்
பசித்த வயிறுக்கு பாம்புக்கறியும்
தருவதென்ன நீதியென்று
கன்னம் அறைந்து கேட்டுச்சொல்.
பணத்தின் மீது வெறுப்பின்றி
கவிதாயினி எழில்விழி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக