# வெட்கம் #
அடேய் சரவணா ............!
எழில்விழிக்கு வெட்கப்படவே
தெரியாதாம்.
ஊரே சொல்கிறது.
எனக்கு கவலையில்லை.
நீயும் சொல்லும் போது தான்
எனக்கு வெட்கம் வருகிறது.
ஊர் எனக்கு வெட்கப்பட
சொல்லித்தர வில்லை.
ஆனால், நீ
எனக்கு வெட்கப்படுவதைத்தவிர
வேறெந்த சந்தர்ப்பத்தையும்
சொல்லித்தரவேயில்லை.
சேற்று வயல் உழவுக்கு முன்
தளை போட்டு மிதிக்கிறாய்.
மாந்தளையில் கிடைத்த
மாங்காய் பிஞ்சொன்றை
என்னிடம் காட்டி கடித்துச்சிரிக்கிறாய்.
எவ்வளவு வெட்கம் வந்தது
என்பது ஊருக்கு தெரியுமா?
அதே வயல் நடவு நடக்கிறது.
நீ பின் வரப்பில் நடக்கும்
வாசத்தை காற்று எடுத்து வருகிறது.
நாற்று நடுவதில் புதுமையாக
உட்கார்ந்து நடுகிறேன். _ அதில் இருப்பதுதான்
வெட்கம் என்பது ஊருக்கு தெரியுமா?
களை பறிக்கும் காலம் வந்து
கல்லூரிக்கும் விடுமுறை வந்து
இருவர் வயலிலும் களையும் வந்து……
உட்கார்ந்து பறிக்க வாய்ப்பில்லை
என்பது தெரிந்து எதிர் வரப்பில் வருகிறாய்.
கழுத்தை குனிந்து களையை மறைப்பதிலுள்ள
கஷ்டமும் வெட்கமும் ஊருக்கு தெரியுமா?
உரம் வீச ஊருக்கு முன் கிளம்புகிறாய்.
உனக்கு முன் நான் கிளம்பி விட்டேன்.
கருக்கலுலிலே முடித்த காலைக் கடனுக்கு
என் வயலிலா வந்து காலைக்கழுவுவது?
நானிருப்பது தெரிந்துதான் வந்தாயாம்.
அப்போது வந்த வெட்கம் ஊருக்கு தெரியுமா?
வந்தே விட்டது அந்த அறுவடைக்காலம்.
கதிர்கட்டுடன் என்னை தொடர்கிறாய்.
கருத்து வலிப்பதாய் சுமைதாங்கி நாடுகிறாய்.
நான் உனக்கு முன்பே இறக்கி நிற்கிறேன்.
கதிர்கட்டு மறைப்பில் கட்டி முத்தம் தந்த போது
எனக்கு வந்த வெட்கம் ஊருக்கு தெரியுமா?
உழைப்பின் பலனை பெற்று வருகிறாய்.
உள்ளுக்குள் ஒரு எதிர்பார்ப்புடன் நான்.
உள்ளாடை ஒன்றும் அதற்குள் ஒற்றைக் கல் மூக்குத்தி ஒன்றும் தந்து செல்கிறாய்
போட்டுக்கொண்டு இன்றிரவு வந்துவிடு.
இப்போது சொல். ஊருக்கு தெரியாமல்
நான் வெட்கப்படுவதே என் இயல்பாய் இருப்பது. !!!
வெட்கங்களுடன்
கவிதாயினி எழில்விழி.
அடேய் சரவணா ............!
எழில்விழிக்கு வெட்கப்படவே
தெரியாதாம்.
ஊரே சொல்கிறது.
எனக்கு கவலையில்லை.
நீயும் சொல்லும் போது தான்
எனக்கு வெட்கம் வருகிறது.
ஊர் எனக்கு வெட்கப்பட
சொல்லித்தர வில்லை.
ஆனால், நீ
எனக்கு வெட்கப்படுவதைத்தவிர
வேறெந்த சந்தர்ப்பத்தையும்
சொல்லித்தரவேயில்லை.
சேற்று வயல் உழவுக்கு முன்
தளை போட்டு மிதிக்கிறாய்.
மாந்தளையில் கிடைத்த
மாங்காய் பிஞ்சொன்றை
என்னிடம் காட்டி கடித்துச்சிரிக்கிறாய்.
எவ்வளவு வெட்கம் வந்தது
என்பது ஊருக்கு தெரியுமா?
அதே வயல் நடவு நடக்கிறது.
நீ பின் வரப்பில் நடக்கும்
வாசத்தை காற்று எடுத்து வருகிறது.
நாற்று நடுவதில் புதுமையாக
உட்கார்ந்து நடுகிறேன். _ அதில் இருப்பதுதான்
வெட்கம் என்பது ஊருக்கு தெரியுமா?
களை பறிக்கும் காலம் வந்து
கல்லூரிக்கும் விடுமுறை வந்து
இருவர் வயலிலும் களையும் வந்து……
உட்கார்ந்து பறிக்க வாய்ப்பில்லை
என்பது தெரிந்து எதிர் வரப்பில் வருகிறாய்.
கழுத்தை குனிந்து களையை மறைப்பதிலுள்ள
கஷ்டமும் வெட்கமும் ஊருக்கு தெரியுமா?
உரம் வீச ஊருக்கு முன் கிளம்புகிறாய்.
உனக்கு முன் நான் கிளம்பி விட்டேன்.
கருக்கலுலிலே முடித்த காலைக் கடனுக்கு
என் வயலிலா வந்து காலைக்கழுவுவது?
நானிருப்பது தெரிந்துதான் வந்தாயாம்.
அப்போது வந்த வெட்கம் ஊருக்கு தெரியுமா?
வந்தே விட்டது அந்த அறுவடைக்காலம்.
கதிர்கட்டுடன் என்னை தொடர்கிறாய்.
கருத்து வலிப்பதாய் சுமைதாங்கி நாடுகிறாய்.
நான் உனக்கு முன்பே இறக்கி நிற்கிறேன்.
கதிர்கட்டு மறைப்பில் கட்டி முத்தம் தந்த போது
எனக்கு வந்த வெட்கம் ஊருக்கு தெரியுமா?
உழைப்பின் பலனை பெற்று வருகிறாய்.
உள்ளுக்குள் ஒரு எதிர்பார்ப்புடன் நான்.
உள்ளாடை ஒன்றும் அதற்குள் ஒற்றைக் கல் மூக்குத்தி ஒன்றும் தந்து செல்கிறாய்
போட்டுக்கொண்டு இன்றிரவு வந்துவிடு.
இப்போது சொல். ஊருக்கு தெரியாமல்
நான் வெட்கப்படுவதே என் இயல்பாய் இருப்பது. !!!
வெட்கங்களுடன்
கவிதாயினி எழில்விழி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக