திங்கள், 12 ஜூன், 2017

என் முகநூல் நண்பர் பாரதி தமிழ்ச்சங்கம்
அவர்கள் தந்தது இந்த

                   # தலைப்பு (பூ) #

தலைப்புக்குத்தான் தடுமாறுகிறேன்
என் தங்கமே, நீ என்
தலைப்பே இல்லாத தனி மொழி.

என் ஒவ்வொரு பருவத்தையும்
தலைப்பிட்டு தாலாட்டியது
உன் ஓசையற்ற உலகப்பொது மொழி .

என் ஒவ்வொரு உணவுக்கும்
தலைப்பிட்டு ஊட்டியது
தந்தையுமான உன் தாய்மொழி.

என் ஒவ்வொரு உடைகளையும்
தலைப்பிட்டு உருவிக்கொண்டது
தாபங்களாலான உன் காதல்மொழி.

நானுறங்கிய ஒவ்வொரு அறைக்கும்
பள்ளியறை என்றே தலைப்பிட்டது
பாசங்களாலான உன் பருவ மொழி.

நம் ஒவ்வொரு இரவு சீண்டல்களுக்கும்
ஊடல் என்றே தலைப்பிட்டது
கூடல் என்ற உன் கூத்து மொழி .

சத்தங்களில்லா நம் முத்தங்களுக்கு
சந்தோசம் என்றே தலைப்பிட்டது
ஒன்றை சிரிப்பாலான உன் உண்மை மொழி.

கூடலுக்கு பின்னான ஒரு நாளிரவில்
எனக்கு வேசி என்றே தலைப்பிட்டது
வேசங்களே இல்லாத உன் நேச மொழி.

அடேய் சரவணா ..............

எத்தனை தலைப்புகள் எனக்கு தந்தாய்
உனக்காக என் தலைப்பு இது.
உலகில் நான் யாருக்கும் தராத தலைப்பு.

ஆமாம்.
நீ தினம் தந்த என் தலைப்பூவுக்கு
நான் உனக்கு தந்த உன்னத தலைப்பு.
தகப்பன் என்ற தலைப்பு
என் தலைமகனே!
உனக்கது சிறப்பு!!

தலைப்பூவுடன்
கவிதாயினி எழில்விழி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக