திங்கள், 12 ஜூன், 2017

# காதல் #

மூட முடியாத அளவுக்கு என் காதலால்
நிரம்பித்தான் வழிகிறது.
உன் காதல் கஜானா.
நீயோ கஞ்சன்
நிரம்பவில்லையே என்கிறாய்.

மயிலுக்கும் குயிலுக்கும்
மானுக்கும் மீனுக்கும்
எனக்குள் இடமளிக்கிறாய்.
என் காதலுக்கு எங்கே
இடம் ஒதுக்கியிருக்கிறாய்.?

மழை பெய்கிறது  நனைகிறாய்
மழை நீர் உன் மார்பில் வழிகிறது.
மழை நிற்பதற்குள்
மழை என் மார்பை துளைக்கும் படி
உன் மேலாடைக்குள் என்னை மூடிக்கொள்.

அடேய் சரவணா ..............

கடவுள் எழுதிய காதல் கவிதை நான்
தவறென்று தெரிந்தும்
தன் பெயரை எழுதிக்கொண்டான்.
படிப்பதற்கு முன்பாகவே நீ - அந்த
எழுத்துப்பிழை நீக்கி என்னைக்கொள்.

கவிதாயினி எழில்விழி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக