திங்கள், 12 ஜூன், 2017

# காதல் #

சோதிடத்தில் கூற மறந்த
பதினொன்றாம் பொருத்தம்.

பார்வைக்கே சிக்காத
பண்பாட்டு வேசம்.

மானுடத்திற்கு உரமாகும்
மனம் உதிர்க்கும் இலைகள்.

விலையில்லாத முதிர்கன்னியின்
உடல் வீசும் உன்னத வாசம்.

உற்பத்தி செய்யப்படாத
விற்பனை விளை பொருள்.

ஒவ்வொருக்கு உள்ளேயும் உலா வரும்
மூன்று செல் அமீ்பா.

உனக்கும் எனக்கும் வராத வரை
வரைமுறை இல்லா புதுக்கவிதை.

அடேய் சரவணா ........... .

உனக்கும் எனக்கும் வந்த பின்பு
பிரபஞ்சம் தாண்டிய மரபுக்கவிதை.

காதலுடன்
கவிதாயினி எழில்விழி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக