# பிரிவு #
பிரியாத வரம் வேண்டி
பிரியங்கள் பாடுகிறாய்.
பிரிவென்பது இயல்பு.
பிரிவென்பது புரிதல்
ஒன்றுக்குள் ஒன்றாதல்
புரிதலின் இறப்பு .!
ஒன்றில் வேறாதல்
தத்துவமாய் சிறப்பு.!
பிரிதலின் புனிதத்தில்
புரிதல்கள் வாழும்.!
புரிந்தவர்கள் பிரிவதில்லை
பூமியில் இது சாபம்!
பிரிதலில் மகிழ்ச்சி கொள்.
புரிகிறதா பூவே,
பூப்பவை எல்லாம்
பூஜைக்கு போய் சேர்வதில்லை.
மண்ணை விட்டு நீர் பிரிதல் ஆறு
மண்ணை விட்டு நீர் பிரிதல் ஆவி
மண்ணை விட்டு நீர் பிரிதல் வரம்
மீண்டும் மண்ணுக்கே வருவது புரிதல்.
அடேய் சரவணா .......
மண்ணுக்கும் நீருக்குமே
பிரிதலும் புரிதலும்
இயல்பானது என்றான போது
உனக்கும் எனக்கும் எப்படி வேறாகும்?
ஏனென்றால்,
புரிதல் என்பது பூசாரி !
பிரிதல் என்பதே கடவுள்...!!
வணங்குகிறாள் கவிதாயினி .
பிரியாத வரம் வேண்டி
பிரியங்கள் பாடுகிறாய்.
பிரிவென்பது இயல்பு.
பிரிவென்பது புரிதல்
ஒன்றுக்குள் ஒன்றாதல்
புரிதலின் இறப்பு .!
ஒன்றில் வேறாதல்
தத்துவமாய் சிறப்பு.!
பிரிதலின் புனிதத்தில்
புரிதல்கள் வாழும்.!
புரிந்தவர்கள் பிரிவதில்லை
பூமியில் இது சாபம்!
பிரிதலில் மகிழ்ச்சி கொள்.
புரிகிறதா பூவே,
பூப்பவை எல்லாம்
பூஜைக்கு போய் சேர்வதில்லை.
மண்ணை விட்டு நீர் பிரிதல் ஆறு
மண்ணை விட்டு நீர் பிரிதல் ஆவி
மண்ணை விட்டு நீர் பிரிதல் வரம்
மீண்டும் மண்ணுக்கே வருவது புரிதல்.
அடேய் சரவணா .......
மண்ணுக்கும் நீருக்குமே
பிரிதலும் புரிதலும்
இயல்பானது என்றான போது
உனக்கும் எனக்கும் எப்படி வேறாகும்?
ஏனென்றால்,
புரிதல் என்பது பூசாரி !
பிரிதல் என்பதே கடவுள்...!!
வணங்குகிறாள் கவிதாயினி .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக