# வித்தை #
யோசித்து பார்க்கிறேன்.
வித்தையின் மூலம் எது ?
உயிர்ப்பின் உரம் அது.
உண்மையில் வரம் அது.
நதி மூல, ரிஷி மூல
விளக்கங்களின் விளக்கம் அது.
ஒத்தை வழி போனாலும்
வித்தை வழி போய்ப் பார்.
அத்தை மாமன் உறவு கூட
வித்தை சொல்லும் விந்தை பார்.
தத்தைக்கும் வித்தையுண்டு
மெத்தையில் அது மெத்த உண்டு.
சித்திரத்தில் பொய் எழுதி
சரித்திரத்தை சரித்ததுண்டு.
வித்தையில்லா உயிர் என்பது
நத்தையில்லா கூடு போலும்.
வாழும் நாள் முடியும் வரை
வாழவைக்கும் உயிர் போலும்.
காதலுக்கும் வித்தையுண்டு.
கட்டில் காமத்திற்கு வித்தையுண்டு.
வீரத்திற்கும் வித்தையுண்டு
பத்ம வீயூகத்திற்கும் வித்தையுண்டு.
பாம்புக்கும் வித்தையுண்டு
பாவியந்த பல்லிக்கும் வித்தையுண்டு.
குழந்தைக்கும் வித்தையுண்டு
கொடுக்குள்ள குழவிக்கும் வித்தையுண்டு.
மானுக்கும் வித்தையுண்டு
தோகை மயிலுக்கும் வித்தையுண்டு.
மீனுக்கும் வித்தை யுண்டு.
வேட்டை ஆடுவதற்கும் அதுவுண்டு.
வித்தையில்லா வாழ்வென்பது
சத்தியமாய் பாழானது.
வித்தையோடு போவதென்பது
பத்தியத்தில் தேனானது.
என்னிடமும் வித்தையுண்டு
அத்தை மகன் உன்னிடமும் அதுவுண்டு
சுத்தி சுத்தி வந்து என்னை
சுத்த வைக்கும் காதல் அது.
அடேய் சரவணா.......
எல்லோருக்கும் வித்தை உண்டு.
உனக்கு மட்டும் மெத்த வுண்டு.
முத்தத்தில் வித்தை காட்டி
மோகத்தில் வித்தை காட்டி
பார்வையில் வித்தை காட்டி
வேர்வையில் வீழ்த்தி விட்டாய்.
வித்தை என்பது வரமானால்
அதை எனக்கு தந்த நீ சாமி!
வித்தை என்பது சாபமானால்
அதையும் நீயே தா சாமி!!
வித்தையில் மகிழ்வுடன்
கவிதாயினி எழில்விழி.
யோசித்து பார்க்கிறேன்.
வித்தையின் மூலம் எது ?
உயிர்ப்பின் உரம் அது.
உண்மையில் வரம் அது.
நதி மூல, ரிஷி மூல
விளக்கங்களின் விளக்கம் அது.
ஒத்தை வழி போனாலும்
வித்தை வழி போய்ப் பார்.
அத்தை மாமன் உறவு கூட
வித்தை சொல்லும் விந்தை பார்.
தத்தைக்கும் வித்தையுண்டு
மெத்தையில் அது மெத்த உண்டு.
சித்திரத்தில் பொய் எழுதி
சரித்திரத்தை சரித்ததுண்டு.
வித்தையில்லா உயிர் என்பது
நத்தையில்லா கூடு போலும்.
வாழும் நாள் முடியும் வரை
வாழவைக்கும் உயிர் போலும்.
காதலுக்கும் வித்தையுண்டு.
கட்டில் காமத்திற்கு வித்தையுண்டு.
வீரத்திற்கும் வித்தையுண்டு
பத்ம வீயூகத்திற்கும் வித்தையுண்டு.
பாம்புக்கும் வித்தையுண்டு
பாவியந்த பல்லிக்கும் வித்தையுண்டு.
குழந்தைக்கும் வித்தையுண்டு
கொடுக்குள்ள குழவிக்கும் வித்தையுண்டு.
மானுக்கும் வித்தையுண்டு
தோகை மயிலுக்கும் வித்தையுண்டு.
மீனுக்கும் வித்தை யுண்டு.
வேட்டை ஆடுவதற்கும் அதுவுண்டு.
வித்தையில்லா வாழ்வென்பது
சத்தியமாய் பாழானது.
வித்தையோடு போவதென்பது
பத்தியத்தில் தேனானது.
என்னிடமும் வித்தையுண்டு
அத்தை மகன் உன்னிடமும் அதுவுண்டு
சுத்தி சுத்தி வந்து என்னை
சுத்த வைக்கும் காதல் அது.
அடேய் சரவணா.......
எல்லோருக்கும் வித்தை உண்டு.
உனக்கு மட்டும் மெத்த வுண்டு.
முத்தத்தில் வித்தை காட்டி
மோகத்தில் வித்தை காட்டி
பார்வையில் வித்தை காட்டி
வேர்வையில் வீழ்த்தி விட்டாய்.
வித்தை என்பது வரமானால்
அதை எனக்கு தந்த நீ சாமி!
வித்தை என்பது சாபமானால்
அதையும் நீயே தா சாமி!!
வித்தையில் மகிழ்வுடன்
கவிதாயினி எழில்விழி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக