# போர்க்களமும் கவிஞனும் *
அதிசய மலரொன்று ஆற்றுக்கு
அந்தப்புரத்தில் இருக்குதென்று - ஒரு
போர் முடிந்த இரவில்
பறித்து வரப்போயிருந்தேன்.
நீருக்கு பதில் ரத்தமும்,
ஈரத்திற்கு பதில் நிணமும்,
இலைகளுக்கு பதில் உறுப்புகளும்,
பூக்களுக்கு பதில் உயிர்களும் ....
தாண்டிப்போய் விட்டேன் - அந்த
தாமரையை பார்த்து விட்டேன்.
அதுவரை அங்கிருந்த அந்தப்புறா
சமாதானம் மறுத்து சமராடியது.
எந்த போரில் வென்று விட்டாய்?
உயிர் தாமரை பதிக்க தகுதி பெற்றாய் ?
என்னை போரில் வெற்றி கொள்,
எனினும் தோல்வியை ஒத்துக் கொள்.
இருவரிடமும் ஏமாளி என்ற
எறிவளை இருந்தது.
பாசத்திடம் போரிட்டு தோற்றோம்.
நம்மிடம் வளமை என்னும்
மனவாளிருந்தும் கூட
வறுமையிடம் தோற்றோம்.
நம்மிடம் முத்தமென்ற
குறுவாள் இருந்தது.
காதல் போரில் தோற்றோம்.
நம்மிடம் மோகனம் என்னும்
கேடயம் இருந்தது
ஊடல்களில் தோற்றோம்.
நோயுடன் போரிட்டு தோற்றோம்.
பாயுடன் போரிட்டு தோற்றோம்.
தாயுடன் போரிட்டு தோற்றோம்.
தனியனாய் போரிட்டு தோற்றோம்.
அடேய் சரவணா .......
வாழ்க்கையென்ற எதிரி படைத்து
இல்லாத ஆயுதமொன்று கொடுத்து
போரிடாமல் நம்மிலுன்னை வென்றானே
அந்த கலைஞனை வரச்சொல்.
போர்க்களம் பற்றி பிறர் எழுதாத
ஒரு கவிதையெழுத வேண்டும்.
கவிதாயினி எழில் விழி
அதிசய மலரொன்று ஆற்றுக்கு
அந்தப்புரத்தில் இருக்குதென்று - ஒரு
போர் முடிந்த இரவில்
பறித்து வரப்போயிருந்தேன்.
நீருக்கு பதில் ரத்தமும்,
ஈரத்திற்கு பதில் நிணமும்,
இலைகளுக்கு பதில் உறுப்புகளும்,
பூக்களுக்கு பதில் உயிர்களும் ....
தாண்டிப்போய் விட்டேன் - அந்த
தாமரையை பார்த்து விட்டேன்.
அதுவரை அங்கிருந்த அந்தப்புறா
சமாதானம் மறுத்து சமராடியது.
எந்த போரில் வென்று விட்டாய்?
உயிர் தாமரை பதிக்க தகுதி பெற்றாய் ?
என்னை போரில் வெற்றி கொள்,
எனினும் தோல்வியை ஒத்துக் கொள்.
இருவரிடமும் ஏமாளி என்ற
எறிவளை இருந்தது.
பாசத்திடம் போரிட்டு தோற்றோம்.
நம்மிடம் வளமை என்னும்
மனவாளிருந்தும் கூட
வறுமையிடம் தோற்றோம்.
நம்மிடம் முத்தமென்ற
குறுவாள் இருந்தது.
காதல் போரில் தோற்றோம்.
நம்மிடம் மோகனம் என்னும்
கேடயம் இருந்தது
ஊடல்களில் தோற்றோம்.
நோயுடன் போரிட்டு தோற்றோம்.
பாயுடன் போரிட்டு தோற்றோம்.
தாயுடன் போரிட்டு தோற்றோம்.
தனியனாய் போரிட்டு தோற்றோம்.
அடேய் சரவணா .......
வாழ்க்கையென்ற எதிரி படைத்து
இல்லாத ஆயுதமொன்று கொடுத்து
போரிடாமல் நம்மிலுன்னை வென்றானே
அந்த கலைஞனை வரச்சொல்.
போர்க்களம் பற்றி பிறர் எழுதாத
ஒரு கவிதையெழுத வேண்டும்.
கவிதாயினி எழில் விழி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக