# எனக்கும் உனக்கும் ஒரே ஆசை #
எனக்கான விடியல்களுக்கு
உன்னை சூரியனாக வேண்டுகிறேன்.
நீயோ நிலவாகி விடுகிறாய்.
அதனால் எனக்கு
இரவுகளே பிடித்துப் போனது.
எனக்கான உடைகளுக்கு
உன்னை கொக்கிகளாக வேண்டுகிறேன்.
நீயோ நூலாகி விடுகிறாய்.
கொக்கிகள் அப்படியே இருந்தாலும்
நூல் பிரிவதே எனக்கும் பிடிக்கிறது.
எனக்கான இரவுகளுக்கு
உன்னை இசையாக வேண்டுகிறேன்.
நீயோ மோகனம் மட்டுமே இசைக்கிறாய். முத்தத்திலும் உன் மோகனம் கேட்பதால்
சத்தம் இல்லாமலும் கேட்கப் பிடிக்கிறது.
எனக்கான குளியல்களுக்கு
உன்னை மஞ்சளாக வேண்டுகிறேன்.
நீயோ தண்ணீராகி விடுகிறாய்.
ஆடையோடு குளித்து நான் தோற்கிறேன்
ஆடைக்குள் நுழைந்து நீ ஜெயிக்கிறாய்.
எனக்கான உன் மூச்சை
முந்தானையில் முடிந்திருக்கிறேன்
மூச்சு முட்டுவதாய் கூறி
முடிச்சவிழ்ப்பதாய் கெஞ்சுகிறாய்.
பிரியும் போது தான் தெரிகிறது
நீ முந்தானையை அவிழ்த்திருக்கிறாய்.
உன்னால் மட்டும் எப்படி முடிகிறது.
எங்கப்பனுக்கு யாரோவாய்,
எங்கம்மாவுக்கு வேலையாளாய்
என் தம்பிக்கு நட்பாய்
எனக்கு மட்டும் இருளிலும் நிழலாய்.
அடேய் சரவணா .....
எனக்கான ஒவ்வொன்றிலும்
ஒவ்வொரு ஆசை சொல்கிறேன்.
நீயோ உன்னாசை சொல்கிறாய்.
ஒத்துக் கொள்வதாய் நடிக்கிறேன்.
ஒன்று தெரியுமா?
உண்மையில் நான் தான் ஜெயிக்கிறேன்.
முடிவில் தோற்றுவிட்ட
கவிதாயினி எழில்விழி
எனக்கான விடியல்களுக்கு
உன்னை சூரியனாக வேண்டுகிறேன்.
நீயோ நிலவாகி விடுகிறாய்.
அதனால் எனக்கு
இரவுகளே பிடித்துப் போனது.
எனக்கான உடைகளுக்கு
உன்னை கொக்கிகளாக வேண்டுகிறேன்.
நீயோ நூலாகி விடுகிறாய்.
கொக்கிகள் அப்படியே இருந்தாலும்
நூல் பிரிவதே எனக்கும் பிடிக்கிறது.
எனக்கான இரவுகளுக்கு
உன்னை இசையாக வேண்டுகிறேன்.
நீயோ மோகனம் மட்டுமே இசைக்கிறாய். முத்தத்திலும் உன் மோகனம் கேட்பதால்
சத்தம் இல்லாமலும் கேட்கப் பிடிக்கிறது.
எனக்கான குளியல்களுக்கு
உன்னை மஞ்சளாக வேண்டுகிறேன்.
நீயோ தண்ணீராகி விடுகிறாய்.
ஆடையோடு குளித்து நான் தோற்கிறேன்
ஆடைக்குள் நுழைந்து நீ ஜெயிக்கிறாய்.
எனக்கான உன் மூச்சை
முந்தானையில் முடிந்திருக்கிறேன்
மூச்சு முட்டுவதாய் கூறி
முடிச்சவிழ்ப்பதாய் கெஞ்சுகிறாய்.
பிரியும் போது தான் தெரிகிறது
நீ முந்தானையை அவிழ்த்திருக்கிறாய்.
உன்னால் மட்டும் எப்படி முடிகிறது.
எங்கப்பனுக்கு யாரோவாய்,
எங்கம்மாவுக்கு வேலையாளாய்
என் தம்பிக்கு நட்பாய்
எனக்கு மட்டும் இருளிலும் நிழலாய்.
அடேய் சரவணா .....
எனக்கான ஒவ்வொன்றிலும்
ஒவ்வொரு ஆசை சொல்கிறேன்.
நீயோ உன்னாசை சொல்கிறாய்.
ஒத்துக் கொள்வதாய் நடிக்கிறேன்.
ஒன்று தெரியுமா?
உண்மையில் நான் தான் ஜெயிக்கிறேன்.
முடிவில் தோற்றுவிட்ட
கவிதாயினி எழில்விழி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக