மஞ்சள் என்பது நிறமல்ல!
நிறங்களில் உனக்கு மட்டும் ஏன்
சிவப்பு பிடிக்கவில்லை?
சிரிக்காமல் சொல்லுகிறாய்,
சிங்காரி வீட்டுக்கு சிவப்புத்தான் அடையாளம்.
அடேய் சண்டாளா!!!
அந்தி சாய்ந்தால் அய்யனார்
கோவிலுக்கும் சிவப்புதான் அடையாளம்
அய்யனார் என்ன ஆண் விபச்சாரியா?
நிறங்களில் உனக்கு மட்டும் ஏன்
பச்சை மட்டுமே பிடிக்கிறது?
சொச்ச முறை கேட்டாலும்
சிரித்தே மறுக்கிறாய் பச்சோந்தியே!!
வெள்ளந்தி பருவங்களில்
வெகுளியாய் இருந்த எனக்கு
விபரம் தெரிந்த இந்த போதுகளில்
’’பச்சை’’யாய் சொல்வதென்றால் – உன்
பச்சையில் எனக்கும் இச்சைதான் போடா!!!
இருட்டுக்குள் நீ விட்டெறிந்த
இற்றுப்போன நிறங்கள் எல்லாம்
வெளிச்சத்தில் நீயென்னை
புரட்டி புரட்டி படிக்கும் போதெல்லாம்
வான வில்லாகி சிரிக்கிறது.
என் கன்னத்தில்சற்றே
சிவப்பாய் நெளிகிறது.
நீல நிற சேலை கட்டும் போதெல்லாம்
நிஜமாகவே எனக்குள் கூடு பாய்கிறாய்.
கருப்பு உள்ளாடைக்குள்
கசங்கிப்போகிறேன்.
கூச்சமாகத்தான் இருக்கிறது.
நீலத்தின் மீது உனக்கென்ன
அத்தனை லயிப்பு?
ஒரே முறைதான் கேட்டேன்.
நீ நீலச்சேலை உடுத்தாத போதெல்லாம்
நிலத்திற்கேதடி உயிர்ப்பு?
நிஜமாகச்சொல்!
நீலமா? கருப்பா?
கருப்பு மட்டும் உனக்கு
ஏனோ வெறுப்பதே இல்லை.
இருட்டுக்குள் ‘ நுழைந்த’ பின்பு
இல்லை வேறு நிறமென்பாய்!
குருட்டு கண்ணணா நீயென்றால்
குறிப்பிட்ட இடத்தில் கிள்ளுவாய்!
ஒத்துக்கொள்கிறேன்.
கறுப்புத்தான் உனக்கும் புடிச்ச கலரு!!
உனக்கு பிடிக்காதென்பதால்
சிவப்பு எனக்கும் பிடிப்பதில்லை.
அடேய் சரவணா……..
இன்று வரை எனக்கு ஒன்று
மட்டும் புரியவே இல்லை!
எனக்கு மிகவும் பிடித்த
‘’மஞ்சள்’’ உனக்கு ஏன்
பிடிக்கவேயில்லை???
மஞ்சளில் விருப்பத்துடன்
கவிதாயினி எழில்விழி>
நிறங்களில் உனக்கு மட்டும் ஏன்
சிவப்பு பிடிக்கவில்லை?
சிரிக்காமல் சொல்லுகிறாய்,
சிங்காரி வீட்டுக்கு சிவப்புத்தான் அடையாளம்.
அடேய் சண்டாளா!!!
அந்தி சாய்ந்தால் அய்யனார்
கோவிலுக்கும் சிவப்புதான் அடையாளம்
அய்யனார் என்ன ஆண் விபச்சாரியா?
நிறங்களில் உனக்கு மட்டும் ஏன்
பச்சை மட்டுமே பிடிக்கிறது?
சொச்ச முறை கேட்டாலும்
சிரித்தே மறுக்கிறாய் பச்சோந்தியே!!
வெள்ளந்தி பருவங்களில்
வெகுளியாய் இருந்த எனக்கு
விபரம் தெரிந்த இந்த போதுகளில்
’’பச்சை’’யாய் சொல்வதென்றால் – உன்
பச்சையில் எனக்கும் இச்சைதான் போடா!!!
இருட்டுக்குள் நீ விட்டெறிந்த
இற்றுப்போன நிறங்கள் எல்லாம்
வெளிச்சத்தில் நீயென்னை
புரட்டி புரட்டி படிக்கும் போதெல்லாம்
வான வில்லாகி சிரிக்கிறது.
என் கன்னத்தில்சற்றே
சிவப்பாய் நெளிகிறது.
நீல நிற சேலை கட்டும் போதெல்லாம்
நிஜமாகவே எனக்குள் கூடு பாய்கிறாய்.
கருப்பு உள்ளாடைக்குள்
கசங்கிப்போகிறேன்.
கூச்சமாகத்தான் இருக்கிறது.
நீலத்தின் மீது உனக்கென்ன
அத்தனை லயிப்பு?
ஒரே முறைதான் கேட்டேன்.
நீ நீலச்சேலை உடுத்தாத போதெல்லாம்
நிலத்திற்கேதடி உயிர்ப்பு?
நிஜமாகச்சொல்!
நீலமா? கருப்பா?
கருப்பு மட்டும் உனக்கு
ஏனோ வெறுப்பதே இல்லை.
இருட்டுக்குள் ‘ நுழைந்த’ பின்பு
இல்லை வேறு நிறமென்பாய்!
குருட்டு கண்ணணா நீயென்றால்
குறிப்பிட்ட இடத்தில் கிள்ளுவாய்!
ஒத்துக்கொள்கிறேன்.
கறுப்புத்தான் உனக்கும் புடிச்ச கலரு!!
உனக்கு பிடிக்காதென்பதால்
சிவப்பு எனக்கும் பிடிப்பதில்லை.
அடேய் சரவணா……..
இன்று வரை எனக்கு ஒன்று
மட்டும் புரியவே இல்லை!
எனக்கு மிகவும் பிடித்த
‘’மஞ்சள்’’ உனக்கு ஏன்
பிடிக்கவேயில்லை???
மஞ்சளில் விருப்பத்துடன்
கவிதாயினி எழில்விழி>
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக