என் முகநூல் பக்கம் தவிர்த்து முதன்முதலாக நிலாச்சோறு அமைப்பில் எழுதி சான்றிதழ் பெற்றுத் தந்தது இந்த
# ஒற்றைத்தாமரை #
ஏரித்தாமரை விரிஞ்சிருச்சி,
எளங்காத்து அடிச்சிருச்சி,
வாடிக்கெடந்த வரிக்கமுகு
வாசம் வீசி வெடிச்சிருச்சி!
உன் வீட்டு வெள்ளாடு
என் வேலி தாண்டிருச்சி,
என் வீட்டு கருப்பாடும்
எளஞ்சூட்டில் கருகிருச்சி!
போன மாசம் நீ போகயிலே. - நான்
வானம் பாத்த பூமியானேன்.
மானம் வச்சி பாத்திருக்கேன் - நான்
கானம் பாடி சிரிச்சிருக்கேன்!
ஓலக்கதவு திறந்து வெச்சேன் - நான்
ஓலப்பாயும் விரிச்சி வெச்சேன்.
மாலைப்பொழுது மயங்கிருச்சி - மனம்
மாமன் ஒன்ன நெனச்சிருச்சி!
செல்லச்சண்டை போடப்போறேன் - நீ
மெல்லக்கட்டி அணைக்கப்போறே,
வெல்லமா நான் இனிக்கிறேனு - என்ன
கொல்லாம கொல்லப் போறே!
ஊருக்கெல்லாம் வெண்தாமரை - நான்
உனக்கு மட்டும் செந்தாமரை.
காத்திருக்குது சிறு தாமரை - உனக்காய்
பூத்திருக்குது இந்த ஒத்தைத்தாமரை!
கவிதாயினி எழில்விழி.
# ஒற்றைத்தாமரை #
ஏரித்தாமரை விரிஞ்சிருச்சி,
எளங்காத்து அடிச்சிருச்சி,
வாடிக்கெடந்த வரிக்கமுகு
வாசம் வீசி வெடிச்சிருச்சி!
உன் வீட்டு வெள்ளாடு
என் வேலி தாண்டிருச்சி,
என் வீட்டு கருப்பாடும்
எளஞ்சூட்டில் கருகிருச்சி!
போன மாசம் நீ போகயிலே. - நான்
வானம் பாத்த பூமியானேன்.
மானம் வச்சி பாத்திருக்கேன் - நான்
கானம் பாடி சிரிச்சிருக்கேன்!
ஓலக்கதவு திறந்து வெச்சேன் - நான்
ஓலப்பாயும் விரிச்சி வெச்சேன்.
மாலைப்பொழுது மயங்கிருச்சி - மனம்
மாமன் ஒன்ன நெனச்சிருச்சி!
செல்லச்சண்டை போடப்போறேன் - நீ
மெல்லக்கட்டி அணைக்கப்போறே,
வெல்லமா நான் இனிக்கிறேனு - என்ன
கொல்லாம கொல்லப் போறே!
ஊருக்கெல்லாம் வெண்தாமரை - நான்
உனக்கு மட்டும் செந்தாமரை.
காத்திருக்குது சிறு தாமரை - உனக்காய்
பூத்திருக்குது இந்த ஒத்தைத்தாமரை!
கவிதாயினி எழில்விழி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக