# கவிதை இப்படித்தான் இருக்கணும் #
இயல்பான எண்ணங்களடங்கிய
வண்ண மைக்கூடு ஒன்று.
இயற்கையை நேசிக்கும்
முனையுடன் கூடிய முள் ஒன்று.
எழுதுவுமே எழுத முடியாத வெள்ளை
வண்ண மனக்காகிதம் ஒன்று.
எல்லாமே எழுதக்கூடிய ஏகாந்த
சாய்விருக்கை ஒன்று.
இப்போது இது போதும்
இனிமையாய் ஒரு கவியெழுத.....
வயிற்றை பற்றி எழுதும் போது
பசியோடிருப்பதை மறைக்காதீர்கள்.
உயிரை போற்றி புகழும் போது
அஸ்தியை கரைக்க மறக்காதீர்கள்.
கொதிப்பதைப் பற்றி குறிப்பிடும் போது
எரிவதை பார்த்து எரிச்சல் படாதீர்கள்.
பனித்துளி அழகை ரசிக்கும் போது
சூரியன் அழகை பழிக்காதீர்கள்
அறுவடை பற்றி எழுதும் போது
கலப்பை கொழுவை மழுக்காதீர்கள்.
சிவனைப் பற்றி எழுதும் போது
சீவனை இழக்க ஒத்துக்கொள்.
கண்ணனைப்பற்றி எழுதும் போது
மீராவின் அழகை ஏற்றுக் கொள்.
அய்யனார் அழகை எழுதும் போது
ஆட்டைக்கொல்ல கற்றுக்கொள்
கலைமகள் பற்றி எழுதும் போது
கல்விப்பெருமையை கவ்விக்கொள்.
கர்த்தரைப் பற்றி எழுதும் போது
கல்வாரி மலையை ஏந்திக்கொள்.
அமைதியைப் பற்றி எழுதும் போதில்
புயல் ஒன்று வருவதை எண்ணிக் கொள்.
கீழே விழுந்து உழலும் போது
நாணல் எழுவதை நினைவில் கொள்.
அடிப்பதைப் பற்றி எழுதும் போதும்
அணைப்பின் சுகத்தை அறிந்து கொள்.
அழகைப் பற்றி எழுதும் போது
ஆபத்தின் வழியில் மறைந்து கொள்.
வரத்தைப்பற்றி எழுதும் போது
சாபமும் சிறந்ததை எழுதிக்கொள்.
குழந்தைப் பற்றி எழுதும் போது
மழலை மொழியை அறிந்து கொள்.
குமரி பற்றி எழுதும் போது
கொஞ்சல் மொழியை புரிந்து கொள்.
காதல் பற்றி எழுதும் போது
வெற்றி தோல்வி உணர்ந்து கொள்.
கலவி பற்றி எழுதும் போது
காமம் பற்றிய அறிவைக்கொள்.
எழுத்து என்பது எண்ணங்களின் வடிகால்
தேங்கிய நீர் அழுக்குதான் அறிந்துகொள்
கவிதாயினி எழில்விழி.
இயல்பான எண்ணங்களடங்கிய
வண்ண மைக்கூடு ஒன்று.
இயற்கையை நேசிக்கும்
முனையுடன் கூடிய முள் ஒன்று.
எழுதுவுமே எழுத முடியாத வெள்ளை
வண்ண மனக்காகிதம் ஒன்று.
எல்லாமே எழுதக்கூடிய ஏகாந்த
சாய்விருக்கை ஒன்று.
இப்போது இது போதும்
இனிமையாய் ஒரு கவியெழுத.....
வயிற்றை பற்றி எழுதும் போது
பசியோடிருப்பதை மறைக்காதீர்கள்.
உயிரை போற்றி புகழும் போது
அஸ்தியை கரைக்க மறக்காதீர்கள்.
கொதிப்பதைப் பற்றி குறிப்பிடும் போது
எரிவதை பார்த்து எரிச்சல் படாதீர்கள்.
பனித்துளி அழகை ரசிக்கும் போது
சூரியன் அழகை பழிக்காதீர்கள்
அறுவடை பற்றி எழுதும் போது
கலப்பை கொழுவை மழுக்காதீர்கள்.
சிவனைப் பற்றி எழுதும் போது
சீவனை இழக்க ஒத்துக்கொள்.
கண்ணனைப்பற்றி எழுதும் போது
மீராவின் அழகை ஏற்றுக் கொள்.
அய்யனார் அழகை எழுதும் போது
ஆட்டைக்கொல்ல கற்றுக்கொள்
கலைமகள் பற்றி எழுதும் போது
கல்விப்பெருமையை கவ்விக்கொள்.
கர்த்தரைப் பற்றி எழுதும் போது
கல்வாரி மலையை ஏந்திக்கொள்.
அமைதியைப் பற்றி எழுதும் போதில்
புயல் ஒன்று வருவதை எண்ணிக் கொள்.
கீழே விழுந்து உழலும் போது
நாணல் எழுவதை நினைவில் கொள்.
அடிப்பதைப் பற்றி எழுதும் போதும்
அணைப்பின் சுகத்தை அறிந்து கொள்.
அழகைப் பற்றி எழுதும் போது
ஆபத்தின் வழியில் மறைந்து கொள்.
வரத்தைப்பற்றி எழுதும் போது
சாபமும் சிறந்ததை எழுதிக்கொள்.
குழந்தைப் பற்றி எழுதும் போது
மழலை மொழியை அறிந்து கொள்.
குமரி பற்றி எழுதும் போது
கொஞ்சல் மொழியை புரிந்து கொள்.
காதல் பற்றி எழுதும் போது
வெற்றி தோல்வி உணர்ந்து கொள்.
கலவி பற்றி எழுதும் போது
காமம் பற்றிய அறிவைக்கொள்.
எழுத்து என்பது எண்ணங்களின் வடிகால்
தேங்கிய நீர் அழுக்குதான் அறிந்துகொள்
கவிதாயினி எழில்விழி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக