செவ்வாய், 5 ஜூன், 2018

நீண்ட நாட்களுக்குப் பிறகு
ஒரு சிறு
" அடேய் சரவணா ..... " பதிவு.

மேட்டிலிருந்து பள்ளம்
நோக்கி பாய்கிறாய் !
நீ பாயும் வேகத்தில்
பரிதவித்துதான் போகிறேன்.
பள்ளம் நோக்கி பாய
தயாராகி விட்ட
உன் வேர்வையில் வீசும்
சுகந்தந்தில் சுகமிருக்கிறது.

அபாயகரமான வளைவுகள்
என்று அடையாளமிட்டு நீ
இதழ்களால் நட்டுச்சென்ற
அறிவிப்பு பலகைகளை
திரும்பி வரும்போது
முத்தங்களால் முழுவதும்
அப்புறப்படுத்தி விடு.
அனைவரும் பயணம் செய்ய
நான்
அரசாங்க சாலை அல்ல!
அடேய் சரவணா.....!                                                                           
நான்                                                                                                          உனக்கு மட்டுமேயான
ராஜபாட்டை !!!

கவிதாயினி எழில்விழி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக