# அதையும் நீயே தா சாமி #
உன் வரவுக்கு பின்னர்தான்
வர்ணங்களற்ற எங்கள் வானவில்
தனக்குள் ஆயிரம் வர்ணங்கள்
உண்டென்பதை அறிவித்துக்கொண்டது.
உன் வரவுக்கு பின்னர்தான்
மெளனங்களால் மட்டுமே எழுதப்பட்ட
எங்கள் கவிதைகள் தமிழால் தங்களை
அலங்கரித்துக்கொண்டது.
உன் வரவுக்கு பின்னர்தான்
அன்பென்ற உணர்வுக்கு
அன்புதான் பண்டமாற்று
என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.
உன் வரவுக்கு பின்னர்தான்
எங்கள் விடியல்களை
சூரியன் வந்து தொட மறுத்தது
நிலவே வந்து தொடங்கி வைத்தது.
உன் வரவுக்கு பின்னர்தான்
வார்த்தைகளுக்கு வர்ணம் பூசும்
வாமன வித்தை எங்களுக்கு
வசமாகிப்போனது.
உன் வரவுக்கு பின்னர்தான்
வாழ்க்கைச் சாரல்களில் நனைந்த
பட்டாம்பூச்சிகள் விலகிக்கொண்டது
எங்கள் விலாவில்இறக்கை முளைத்தது.
உன் வரவுக்கு பின்னர்தான்
அன்புக்கு கோபத்தையும்
கோபத்துக்கு அன்பையும்
கேடயமாக்க கற்றுக்கொண்டோம்.
உன் வரவுக்கு பின்னர்தான்
பிறப்பென்ற வார்த்தைக்கு
உன் பிறப்பே பொருளென்று
பிரம்மன் இன்று சொல்லிச்சென்றான்.
உன் வரவுக்கு பின்னர்தான்
தென்றல் எங்கள் வாசல் வந்து
இன்றுதான் நீ பிறந்தாய்
தினமும் தினமும் சொல்கிறது.
உன் வரவே எங்களுக்கு வரமாகி
போனதென்றால் அதை தந்த நீ சாமி!
உன் உருவே எங்களுக்கு உறவாகி
போகுமென்றால்
அதையும் நீயே தா சாமி!!
அன்பு மகளுக்கு பிறந்த நாள்
வாழ்த்துக்கள் கூறுவதில் மகிழ்வது
கவிதாயினி எழில்விழி, சண்முகநாதன், சுலோச்சனா கருப்பசாமி,
சுசீந்திரகுமாரி,
எழில் ஆதித்தன்,
மற்றும்
மைக்கேல்ராஜ், ஸாம், ஏஞ்சல்,
பெற்றோர், பெரியோர்,
கற்றோர், மற்றோர்,
உற்றார், உறவினர்களுடன்
மாறாத நட்புடையோர்.
உன் வரவுக்கு பின்னர்தான்
வர்ணங்களற்ற எங்கள் வானவில்
தனக்குள் ஆயிரம் வர்ணங்கள்
உண்டென்பதை அறிவித்துக்கொண்டது.
உன் வரவுக்கு பின்னர்தான்
மெளனங்களால் மட்டுமே எழுதப்பட்ட
எங்கள் கவிதைகள் தமிழால் தங்களை
அலங்கரித்துக்கொண்டது.
உன் வரவுக்கு பின்னர்தான்
அன்பென்ற உணர்வுக்கு
அன்புதான் பண்டமாற்று
என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.
உன் வரவுக்கு பின்னர்தான்
எங்கள் விடியல்களை
சூரியன் வந்து தொட மறுத்தது
நிலவே வந்து தொடங்கி வைத்தது.
உன் வரவுக்கு பின்னர்தான்
வார்த்தைகளுக்கு வர்ணம் பூசும்
வாமன வித்தை எங்களுக்கு
வசமாகிப்போனது.
உன் வரவுக்கு பின்னர்தான்
வாழ்க்கைச் சாரல்களில் நனைந்த
பட்டாம்பூச்சிகள் விலகிக்கொண்டது
எங்கள் விலாவில்இறக்கை முளைத்தது.
உன் வரவுக்கு பின்னர்தான்
அன்புக்கு கோபத்தையும்
கோபத்துக்கு அன்பையும்
கேடயமாக்க கற்றுக்கொண்டோம்.
உன் வரவுக்கு பின்னர்தான்
பிறப்பென்ற வார்த்தைக்கு
உன் பிறப்பே பொருளென்று
பிரம்மன் இன்று சொல்லிச்சென்றான்.
உன் வரவுக்கு பின்னர்தான்
தென்றல் எங்கள் வாசல் வந்து
இன்றுதான் நீ பிறந்தாய்
தினமும் தினமும் சொல்கிறது.
உன் வரவே எங்களுக்கு வரமாகி
போனதென்றால் அதை தந்த நீ சாமி!
உன் உருவே எங்களுக்கு உறவாகி
போகுமென்றால்
அதையும் நீயே தா சாமி!!
அன்பு மகளுக்கு பிறந்த நாள்
வாழ்த்துக்கள் கூறுவதில் மகிழ்வது
கவிதாயினி எழில்விழி, சண்முகநாதன், சுலோச்சனா கருப்பசாமி,
சுசீந்திரகுமாரி,
எழில் ஆதித்தன்,
மற்றும்
மைக்கேல்ராஜ், ஸாம், ஏஞ்சல்,
பெற்றோர், பெரியோர்,
கற்றோர், மற்றோர்,
உற்றார், உறவினர்களுடன்
மாறாத நட்புடையோர்.