# ரெய்டு #
முகவரி சொல்லாமல் வந்தாலும்
எப்படியோ தெரிந்து கொள்கிறாய்.
எண்ணிச் சொன்ன
எண்ணிக்கைகளுக்கு இரட்டிப்பாய்
வரிதான் செலுத்தி விட்டேனே.
இப்போதென்ன " ரெய்டு "
எப்படியோ தெரிந்து கொள்கிறாய்.
எண்ணிச் சொன்ன
எண்ணிக்கைகளுக்கு இரட்டிப்பாய்
வரிதான் செலுத்தி விட்டேனே.
இப்போதென்ன " ரெய்டு "
ஆரம்பி, ஆரம்பித்து நடத்து
உன் தனி ஒருவன் ரெய்டை.
சாத்திக்கொண்ட கதவுகள்
சாட்சியங்களாகட்டும்.
மூடிக்கொண்ட என் கண்கள்
ஒவ்வொன்றையும்
திறந்து காட்டட்டும்.
சிரிக்காதே.
அறைகளை சொன்னேன்.
உன் தனி ஒருவன் ரெய்டை.
சாத்திக்கொண்ட கதவுகள்
சாட்சியங்களாகட்டும்.
மூடிக்கொண்ட என் கண்கள்
ஒவ்வொன்றையும்
திறந்து காட்டட்டும்.
சிரிக்காதே.
அறைகளை சொன்னேன்.
வரவேற்பு அறையில்
வரிகட்டாத வருமானம் இல்லையோ
தாண்டி செல்கிறாய்.
ஹாலில் பதுக்கி இருக்கலாம்.
சற்று நின்று சோதனை செய்யேன்.
பூஜையறையில் புகுந்து திரும்புகிறாய்.
சமையலறை செல்லாமல் தவிர்க்கிறாய்.
பயப்படாதே
பின்னால்தான் வருகிறேன்.
வரிகட்டாத வருமானம் இல்லையோ
தாண்டி செல்கிறாய்.
ஹாலில் பதுக்கி இருக்கலாம்.
சற்று நின்று சோதனை செய்யேன்.
பூஜையறையில் புகுந்து திரும்புகிறாய்.
சமையலறை செல்லாமல் தவிர்க்கிறாய்.
பயப்படாதே
பின்னால்தான் வருகிறேன்.
பதுக்கிய வரிகள் எல்லாம்
படுக்கையறையில்தான்
பதுங்கி இருக்கும் என்பது தான்
உங்களின் பாலபாடம் போலும்.
சோதனைச்சாலை முயல்போல
உன் கைப்பிடிக்குள் நான்.
போர்வை எடுத்தெறிகிறாய்.
மெத்தை பிய்க்கப்பார்க்கிறேன்.
படுக்கையறையில்தான்
பதுங்கி இருக்கும் என்பது தான்
உங்களின் பாலபாடம் போலும்.
சோதனைச்சாலை முயல்போல
உன் கைப்பிடிக்குள் நான்.
போர்வை எடுத்தெறிகிறாய்.
மெத்தை பிய்க்கப்பார்க்கிறேன்.
வாசலில் ஆளரவம்.
ஆமாம்'
என்னைப்பெற்ற சோதனைக்காரன்.
தெரிந்தால்
இருவருக்குமே வரி கிடைக்கும்.
இப்போது கிளம்பு.
எப்பா, எம்புள்ளிராசா
பின் வாசல் திறந்துதான் இருக்கிறது.
ஆமாம்'
என்னைப்பெற்ற சோதனைக்காரன்.
தெரிந்தால்
இருவருக்குமே வரி கிடைக்கும்.
இப்போது கிளம்பு.
எப்பா, எம்புள்ளிராசா
பின் வாசல் திறந்துதான் இருக்கிறது.
உனக்கு செலுத்த வேண்டிய
வரிகளில் ஒன்றிரண்டு
விடுபட்டிருக்கலாம்.
இரவில் வருவேன்
இலந்தைக்காட்டுக்கு.
நீயும் வந்துவிடு.
செலுத்த வேண்டிய
மொத்த வரியையும்
முத்தமாகவே செலுத்தி விடுகிறேன்.
வரிகளில் ஒன்றிரண்டு
விடுபட்டிருக்கலாம்.
இரவில் வருவேன்
இலந்தைக்காட்டுக்கு.
நீயும் வந்துவிடு.
செலுத்த வேண்டிய
மொத்த வரியையும்
முத்தமாகவே செலுத்தி விடுகிறேன்.
கவிதாயினி எழில்விழி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக