# உனக்கொரு பிள்ளைத்தமிழ். #
அடேய் சரவணா. ........
எதுகை நான் எதற்கும் தயாராக .
மோனை உன் மோகனப் பார்வையில்
அணிகள் இல்லாமல் ஆயத்தமாகி
இரட்டுற மொழியப்போகிறேன். _ அதற்கு ஒரு யாப்பிலக்கணம் எழுதலாம் வா.....
மோனை உன் மோகனப் பார்வையில்
அணிகள் இல்லாமல் ஆயத்தமாகி
இரட்டுற மொழியப்போகிறேன். _ அதற்கு ஒரு யாப்பிலக்கணம் எழுதலாம் வா.....
எழுவாயாய் என் வாய் ஏங்க
பயனிலையாய் உன் பார்வையில்
செயப்படு பொருளை இருவரும்
பயப்படாமல் எழுதலாம் பறந்தோடி வா.
பயனிலையாய் உன் பார்வையில்
செயப்படு பொருளை இருவரும்
பயப்படாமல் எழுதலாம் பறந்தோடி வா.
தளை பிரிக்க நீ தயாராக இரு. நான்
அசை பிரித்து சற்று ஆசையுடன்
சொற்பொருள் பின்வரு நிலையணிக்காக
மற்போர் தொடர்வேன் மறுக்காமல் வா.
அசை பிரித்து சற்று ஆசையுடன்
சொற்பொருள் பின்வரு நிலையணிக்காக
மற்போர் தொடர்வேன் மறுக்காமல் வா.
என்னழகிற்கு நீ வஞ்சப்புகழ்ச்சி செய்.
நான் உயர்வு நவிற்சி அணி தருவேன்.
இடக்கரடக்கல் செய்தாயானால் - எனக்கொரு
இரங்கற்பா மட்டும் எழுதவா.
நான் உயர்வு நவிற்சி அணி தருவேன்.
இடக்கரடக்கல் செய்தாயானால் - எனக்கொரு
இரங்கற்பா மட்டும் எழுதவா.
இந்த பெண்பாவாய்க்காய் ஒரு
வெண்பா பாடு.
நான் ஆடை நெகிழ அகவற்பா தருவேன்.
கலிப்பா ஒன்று தமிழோடு நீ தந்தால்
வஞ்சி நானொரு வஞ்சிப்பா தருவேன் வா.
வெண்பா பாடு.
நான் ஆடை நெகிழ அகவற்பா தருவேன்.
கலிப்பா ஒன்று தமிழோடு நீ தந்தால்
வஞ்சி நானொரு வஞ்சிப்பா தருவேன் வா.
இருவரிணைந்து எழுதும் கலம்பகத்தால்
காமம் எரித்து காதல் வளர்ப்போம்.
நம் காதலைப்பாட தமிழுக்கு மட்டும்
ஆயுட்கால அனுமதி கொடுப்போம் வா.
காமம் எரித்து காதல் வளர்ப்போம்.
நம் காதலைப்பாட தமிழுக்கு மட்டும்
ஆயுட்கால அனுமதி கொடுப்போம் வா.
கவிதாயினி எழில்விழி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக