# அந்த மூன்று நாட்கள். #
இறுக கரம் கோர்த்த - அந்த
முதல் நாள் இரவிலேயே
உதிரத்தின் முதல் சொட்டு - என்
உடை நனைக்க
கோர்த்த கரம் கோர்த்தபடி - என்னை கோவிலுக்குள் தெய்வமாய்
தாங்கிக்கொண்ட - என்
கோமகனே நீ எங்கே?
முதல் நாள் இரவிலேயே
உதிரத்தின் முதல் சொட்டு - என்
உடை நனைக்க
கோர்த்த கரம் கோர்த்தபடி - என்னை கோவிலுக்குள் தெய்வமாய்
தாங்கிக்கொண்ட - என்
கோமகனே நீ எங்கே?
அந்த மூன்று நாள் தவிர மீத
இரவுகளில் நீ என்னை
இம்சித்தாய், சுகமாக இருந்தது.
அந்த மூன்று நாள் மட்டும்
நான் உன்னை இம்சித்தேன்.
அப்போதும்
சுமை தாங்கியாய் என்னை
தாங்கிக்கொண்ட - என்
சுந்தரனே நீ எங்கே?
இரவுகளில் நீ என்னை
இம்சித்தாய், சுகமாக இருந்தது.
அந்த மூன்று நாள் மட்டும்
நான் உன்னை இம்சித்தேன்.
அப்போதும்
சுமை தாங்கியாய் என்னை
தாங்கிக்கொண்ட - என்
சுந்தரனே நீ எங்கே?
இரவுகளில் நானுன்னை
இடுப்பில் கிள்ளுவதையும்
இயல்பாகி நீயென்னை
இன்பத்தில் தள்ளுவதையும்
மூன்று நாள் மட்டும்
முழுதாய் நிறுத்தியவனே
என்னை முதுகிலும் சுமந்தவனே - என்
முதல் குழந்தையே நீ எங்கே?
இடுப்பில் கிள்ளுவதையும்
இயல்பாகி நீயென்னை
இன்பத்தில் தள்ளுவதையும்
மூன்று நாள் மட்டும்
முழுதாய் நிறுத்தியவனே
என்னை முதுகிலும் சுமந்தவனே - என்
முதல் குழந்தையே நீ எங்கே?
மீத இரவுகளை இருட்டில் இருந்து
எடுத்துக் கொண்டு - அந்த
மூன்று இரவுகளை மட்டும்
வெளிச்சத்துக்கு விட்டுக்கொடுத்த
வீம்புக்கு பொறந்தவனே - என்
உடல் ஆய்ந்த விஞ்ஞானியே நீ எங்கே?
எடுத்துக் கொண்டு - அந்த
மூன்று இரவுகளை மட்டும்
வெளிச்சத்துக்கு விட்டுக்கொடுத்த
வீம்புக்கு பொறந்தவனே - என்
உடல் ஆய்ந்த விஞ்ஞானியே நீ எங்கே?
அடிவயிற்று வலி குறைக்க
அழுத்திப்பிடிக்க சொன்னால்
அந்த இடம் வலி குறைப்பாய்.
அடுத்த இடம் வலிக்க வைப்பாய்.
அழுக்குப் புடிச்சவனே, அப்புறம் போ
என்றவுடன் அழகாக சிரிப்பாயே - என்
அற்புதனே நீ எங்கே?
அழுத்திப்பிடிக்க சொன்னால்
அந்த இடம் வலி குறைப்பாய்.
அடுத்த இடம் வலிக்க வைப்பாய்.
அழுக்குப் புடிச்சவனே, அப்புறம் போ
என்றவுடன் அழகாக சிரிப்பாயே - என்
அற்புதனே நீ எங்கே?
கொடுத்த வைத்த வாழ்வென்று
அன்னையிடம் சொல்ல வைத்தாய் .
கொடுப்பினை தந்தாய் என்று
கடவுளுக்கு தந்தி தந்தேன்.
அடுப்பங்கரை வாழ்வை
அந்த மூன்று நாள் உனக்கென
ஒதுக்கி வைத்தேன்.
இன்று குவிந்து கிடக்கிறதடா - என்
குல விளக்கே நீ எங்கே?
அன்னையிடம் சொல்ல வைத்தாய் .
கொடுப்பினை தந்தாய் என்று
கடவுளுக்கு தந்தி தந்தேன்.
அடுப்பங்கரை வாழ்வை
அந்த மூன்று நாள் உனக்கென
ஒதுக்கி வைத்தேன்.
இன்று குவிந்து கிடக்கிறதடா - என்
குல விளக்கே நீ எங்கே?
மாதவிடாய் முதிர்ச்சி வந்து
என் மாபாவம் தீரும் வரை - அந்த
மூன்று நாள் மட்டுமாவது - என்
ஆண் தேவதையை
அனுப்பி வைப்பாயா
ஆண்டவனே ?
என் மாபாவம் தீரும் வரை - அந்த
மூன்று நாள் மட்டுமாவது - என்
ஆண் தேவதையை
அனுப்பி வைப்பாயா
ஆண்டவனே ?
# ரெம்ப வலிக்குதடா... #
கவிதாயினி எழில்விழி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக