# அபச்சாரமல்ல..... விபச்சாரம் #
கற்புக்கரசிகளின் பெயர்களால் கற்புக்கு
கால்காசும் பயனில்லை என்ற பிறகு தான்
அகலிகை போன்ற எங்கள் பெயர்களை
அழகுக்கரசிகள் ஆக்கிக் கொள்வோம்.
வியாபாரத்திற்கு மட்டுமல்ல,
விளம்பரத்துக்கும் பெயர் முக்கியமல்லவா?
எங்களின் இரவுகளில் உங்கள்
வியாபாரம் முடிந்த பிறகு
மகா தத்துவங்கள் சொல்லாதீர்கள்
மடையர்களே,
மனித தத்துவங்களில் நாங்கள்
மாஸ்டர் டிகிரி வாங்கியவர்கள்.
தாயாய் நினைத்து
மார்பில் கவிழ்ந்தவனும்
தாரமாய் நினைத்து
மார்பை பிசைந்தவனும்
விபச்சாரம் முடிந்த பின்பு
எங்கள் தொடுகை அபச்சாரம்
என்னும் போது உங்களை நினைத்தால்
அய்யோ ................... பாவம்.
எங்கள் அலங்காரம் கலைக்கும் முன்பே
உங்கள்அகங்காரம் கரைக்கத் தெரியும்.
நீங்கள் மண்புழுவா? மலைப்பாம்பா ?
என்பதில் இருக்குது அந்த சூத்திரம்.
அதை சொல்வதற்குள் ஏனிந்த ஆத்திரம்.?
வெளிச்சத்தில் சிரிப்பதால்
எங்களுக்கு நட்டமுமல்ல.
இருட்டில் அழுவதால்
உங்களுக்கு லாபமுமல்ல.
எப்படியும் விடிந்து விடும் - உயிர்
ஒழுகி விட்டால் முடிந்து விடும்.
தேவாரம் பாடும் வாய் கூட
அரிதார நேரத்து கலவியில்
ஆரவாரம் செய்யலாம் .
திருவாசகம் பாடும் வாயில்
தெருவாசகமும் பாடலாம்.
ஆமாம்.
மாணிக்க வாசகன் இருக்கும்
மனதின் மறுபுறம் வாத்ஸாயனனை
மறைத்து வைத்திருப்போம்.
இந்த இடத்தில் வந்தேறிகளுக்கு
வரவேற்பில்லை.
விலைவாசி உயர்ந்ததென்று
விலை உயர்த்தப்படக்கூடாத
பட்டியலில் இருந்து
விபச்சாரத்தை நீக்கி விடுங்கள்.
இங்கு முதல் என்பது எங்கள் உடல் .
முடிவென்பது எங்கள் உயிர்.
இடையில் இருப்பது மானம்.
அதற்காகவேனும் உயர வேணும்
எங்கள் வருமானம்.
முத்திரைத்திருடர்கள் நாங்கள்.
மூத்திரச்சந்திலும் முயங்க
தயாராய் நீங்கள்.
திருந்தத்தயாராய் நாங்கள்.
பொது வெளியில் கை குலுக்க
வேண்டாம்.
ஒரு சிநேகப்புன்னகையுடன்
கடந்து போக தயாரா நீங்கள்?
கவிதாயினி எழில்விழி.
கற்புக்கரசிகளின் பெயர்களால் கற்புக்கு
கால்காசும் பயனில்லை என்ற பிறகு தான்
அகலிகை போன்ற எங்கள் பெயர்களை
அழகுக்கரசிகள் ஆக்கிக் கொள்வோம்.
வியாபாரத்திற்கு மட்டுமல்ல,
விளம்பரத்துக்கும் பெயர் முக்கியமல்லவா?
எங்களின் இரவுகளில் உங்கள்
வியாபாரம் முடிந்த பிறகு
மகா தத்துவங்கள் சொல்லாதீர்கள்
மடையர்களே,
மனித தத்துவங்களில் நாங்கள்
மாஸ்டர் டிகிரி வாங்கியவர்கள்.
தாயாய் நினைத்து
மார்பில் கவிழ்ந்தவனும்
தாரமாய் நினைத்து
மார்பை பிசைந்தவனும்
விபச்சாரம் முடிந்த பின்பு
எங்கள் தொடுகை அபச்சாரம்
என்னும் போது உங்களை நினைத்தால்
அய்யோ ................... பாவம்.
எங்கள் அலங்காரம் கலைக்கும் முன்பே
உங்கள்அகங்காரம் கரைக்கத் தெரியும்.
நீங்கள் மண்புழுவா? மலைப்பாம்பா ?
என்பதில் இருக்குது அந்த சூத்திரம்.
அதை சொல்வதற்குள் ஏனிந்த ஆத்திரம்.?
வெளிச்சத்தில் சிரிப்பதால்
எங்களுக்கு நட்டமுமல்ல.
இருட்டில் அழுவதால்
உங்களுக்கு லாபமுமல்ல.
எப்படியும் விடிந்து விடும் - உயிர்
ஒழுகி விட்டால் முடிந்து விடும்.
தேவாரம் பாடும் வாய் கூட
அரிதார நேரத்து கலவியில்
ஆரவாரம் செய்யலாம் .
திருவாசகம் பாடும் வாயில்
தெருவாசகமும் பாடலாம்.
ஆமாம்.
மாணிக்க வாசகன் இருக்கும்
மனதின் மறுபுறம் வாத்ஸாயனனை
மறைத்து வைத்திருப்போம்.
இந்த இடத்தில் வந்தேறிகளுக்கு
வரவேற்பில்லை.
விலைவாசி உயர்ந்ததென்று
விலை உயர்த்தப்படக்கூடாத
பட்டியலில் இருந்து
விபச்சாரத்தை நீக்கி விடுங்கள்.
இங்கு முதல் என்பது எங்கள் உடல் .
முடிவென்பது எங்கள் உயிர்.
இடையில் இருப்பது மானம்.
அதற்காகவேனும் உயர வேணும்
எங்கள் வருமானம்.
முத்திரைத்திருடர்கள் நாங்கள்.
மூத்திரச்சந்திலும் முயங்க
தயாராய் நீங்கள்.
திருந்தத்தயாராய் நாங்கள்.
பொது வெளியில் கை குலுக்க
வேண்டாம்.
ஒரு சிநேகப்புன்னகையுடன்
கடந்து போக தயாரா நீங்கள்?
கவிதாயினி எழில்விழி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக