# நங்கைகளல்ல, என் தங்கைகள் #
இந்த என் சிறுகவிதை உலக திருநங்கைகளுக்கு சமர்ப்பணம்.
இதோ....
நாங்கள் ஆடிக்கொண்டிருக்கும்
சமூக தெருக்கூத்தில்
அரவான் களபலிக்கு
ஆளின்றி தவிக்கிறோம்!
சமூக தெருக்கூத்தில்
அரவான் களபலிக்கு
ஆளின்றி தவிக்கிறோம்!
அப்படியே வந்து விடு.
ஆணுமல்ல, பெண்ணுமல்ல,
அலியுமல்ல...
என்று சொல்லி
அழகாக கொன்றிடுவோம்
அப்படியே செத்துவிடு!
ஆணுமல்ல, பெண்ணுமல்ல,
அலியுமல்ல...
என்று சொல்லி
அழகாக கொன்றிடுவோம்
அப்படியே செத்துவிடு!
ஏனென்றால்
சிகண்டியை முன்னிறுத்தி
பீஷ்மரை சாய்த்த
பெரு வரலாறு ஒன்று
எங்களுக்கு உண்டு!
சிகண்டியை முன்னிறுத்தி
பீஷ்மரை சாய்த்த
பெரு வரலாறு ஒன்று
எங்களுக்கு உண்டு!
ஆணே பெண்ணாகி
ஆணை புணர்ந்து
அய்யப்பனை பெற்ற
அசிங்கமும் உண்டு.
ஆணை புணர்ந்து
அய்யப்பனை பெற்ற
அசிங்கமும் உண்டு.
கூவாக குருக்களால்
குல மங்கை ஆக்கப்பட்டு
கூடி முடிப்பதாய் நடித்து
கூந்தல் அவிழ்ப்பதுமுண்டு.
குல மங்கை ஆக்கப்பட்டு
கூடி முடிப்பதாய் நடித்து
கூந்தல் அவிழ்ப்பதுமுண்டு.
அலிகள் கையால்
அள்ளித்தந்தால்
ஆதாயம் உண்டென்று
பிச்சை கொடுத்து
பாதி பிடுங்கும்
பெரிய மனிதர்களும் இங்குண்டு.
அள்ளித்தந்தால்
ஆதாயம் உண்டென்று
பிச்சை கொடுத்து
பாதி பிடுங்கும்
பெரிய மனிதர்களும் இங்குண்டு.
குழந்தைகளே ஆனாலும் கூட
உங்கள் கொங்கைகள் மீது எங்கள்
தூமை பார்வைகள்.
பருவமே வராமலும் கூட
எங்கள் குழந்தைகள் மீதோ உங்கள்
தாய்மை பார்வைகள்.
உங்கள் கொங்கைகள் மீது எங்கள்
தூமை பார்வைகள்.
பருவமே வராமலும் கூட
எங்கள் குழந்தைகள் மீதோ உங்கள்
தாய்மை பார்வைகள்.
கூத்தை முடிப்போமா?
தெருக்கூத்து முடிப்பதற்கு
நான் தவசுக்கம்பமேறி
கருடன் வரவுக்காய்
கடின தவமிருப்பேன்.
நான் தவசுக்கம்பமேறி
கருடன் வரவுக்காய்
கடின தவமிருப்பேன்.
கருடன் வருவானோ,
மாட்டானோ,
அந்த கடவுள் வருவான்.
எனக்கான உன்னை
உயிர்ப்பித்து தருவான்.
மாட்டானோ,
அந்த கடவுள் வருவான்.
எனக்கான உன்னை
உயிர்ப்பித்து தருவான்.
ஆணாண என்னை _ உன்
ஆளாக்கி அருள்வான்.
தவசு முடிந்து - நானும்
உயிர் பெற்று வருவேன்.
உந்தன்
உயிரோடு கலப்பேன்....
ஆளாக்கி அருள்வான்.
தவசு முடிந்து - நானும்
உயிர் பெற்று வருவேன்.
உந்தன்
உயிரோடு கலப்பேன்....
கவிதாயினி எழில்விழி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக