# பழகிப்பார் #
ஊமைச்சிரிப்பு உள்ள வெச்சி,
உள்ளம் கொள்ளா காதல் வெச்சி,
ஊர்மறைச்சி வாழுறா,
உப்பு கொறச்சி சாப்புடறா,
என் ஒன்னு விட்ட தங்கச்சி.
அவளோட ஒரு நாளு
அன்போட பழகிப் பாரு ............
உள்ளம் கொள்ளா காதல் வெச்சி,
ஊர்மறைச்சி வாழுறா,
உப்பு கொறச்சி சாப்புடறா,
என் ஒன்னு விட்ட தங்கச்சி.
அவளோட ஒரு நாளு
அன்போட பழகிப் பாரு ............
பாட்டு வாத்தி பெரிய மவ
பட்டுடுத்தி வளந்த மவ
பார்வையில காந்தம் வெச்சி
பாத்திருக்கா பாவிமவ
பாட்டு பாடும் சாக்கு வெச்சி
அவளோட ஒரு நாளு
பாசம் வெச்சி பழகிப்பாரு........
பட்டுடுத்தி வளந்த மவ
பார்வையில காந்தம் வெச்சி
பாத்திருக்கா பாவிமவ
பாட்டு பாடும் சாக்கு வெச்சி
அவளோட ஒரு நாளு
பாசம் வெச்சி பழகிப்பாரு........
கீழத்தெரு செல்லாயி
கிறுக்கி மவ ராசாத்தி
ஆவாத ஆச வெச்சி
அழுதிருக்கா பாதகத்தி
கருப்பா இருந்தாலும்
களையான கருவாச்சி
அவளோட ஒரு நாளு
காதல் வெச்சி பழகிப்பாரு........
கிறுக்கி மவ ராசாத்தி
ஆவாத ஆச வெச்சி
அழுதிருக்கா பாதகத்தி
கருப்பா இருந்தாலும்
களையான கருவாச்சி
அவளோட ஒரு நாளு
காதல் வெச்சி பழகிப்பாரு........
வாய்க்காரி வம்புக்காரி
வடக்கு வீட்டு வாத்திச்சி.
ஓலக்கூர பிரிச்சி வெச்சி ஒன்ன
ஒளிஞ்சி பாக்கும் பாசக்காரி
பால் போல மனசுக்காரி
பாசத்துல அடிமைக்காரி
அவளோட ஒரு நாளு
அழகாக பழகிப்பாரு..........
வடக்கு வீட்டு வாத்திச்சி.
ஓலக்கூர பிரிச்சி வெச்சி ஒன்ன
ஒளிஞ்சி பாக்கும் பாசக்காரி
பால் போல மனசுக்காரி
பாசத்துல அடிமைக்காரி
அவளோட ஒரு நாளு
அழகாக பழகிப்பாரு..........
ஆத்தோர குடிசக்காரி,
ஆங்காரி குடிகாரி,
திமிரெடுத்த காளைக்கெல்லாம்
தினவு தீர்க்கும் ரோசக்காரி
அவசரத்துக்கு அவுசாரி - ஒம் மேல
அன்பு வச்ச வீம்புக்காரி
அவளோட ஒரு நாளு
உரிம வெச்சி பழகிப்பாரு. ........
ஆங்காரி குடிகாரி,
திமிரெடுத்த காளைக்கெல்லாம்
தினவு தீர்க்கும் ரோசக்காரி
அவசரத்துக்கு அவுசாரி - ஒம் மேல
அன்பு வச்ச வீம்புக்காரி
அவளோட ஒரு நாளு
உரிம வெச்சி பழகிப்பாரு. ........
உலகத்து அழகியெல்லாம்
ஓரணியில் வந்தாலும்
உலகத்தில் எல்லை சென்றும்
உனக்காக காத்திருப்பேன்.
உயிர் மூச்சு உனக்கென்று
உயில் எழுதி பாத்திருப்பேன்.
அடேய் சரவணா .......
பாதையில புல் முளைக்கும்
பருவ காலம் முடியும் முன்னே
என்னோடயும் ஒரு நாளு
நான் எரியுமுன்னே பழகிப்பாரு.........
ஓரணியில் வந்தாலும்
உலகத்தில் எல்லை சென்றும்
உனக்காக காத்திருப்பேன்.
உயிர் மூச்சு உனக்கென்று
உயில் எழுதி பாத்திருப்பேன்.
அடேய் சரவணா .......
பாதையில புல் முளைக்கும்
பருவ காலம் முடியும் முன்னே
என்னோடயும் ஒரு நாளு
நான் எரியுமுன்னே பழகிப்பாரு.........
கவிதாயினி எழில்விழி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக