வெள்ளி, 24 மார்ச், 2017

# தரிசனம் #
அடேய் சரவணா ............
என் வலது பக்க மூக்குக்திக்கு
உன்னைப் பார்க்க ஆசையாம்.
நேற்று கோவிலில் கூட கேட்டது.
இன்று கல்லூரியில் கேட்கிறது.
நாளை ஆற்றிலும் கேட்குமாம்.
முக்குத்தி என்ன ?
வலப் பக்க தோடு தொடங்கி
கொலுசு வரை அத்தனையும்
எத்தனை நாளாய் கேட்கிறது?
ஒரு நாளாவது - என்
வலப்பக்கமாக வந்து பேசேன்.
வரமாட்டாயா?
பார்க்கலாம்.
நாளை தொடங்கி என் மூக்குத்தி
சொல்லும் நான் வரை
குளியல் தொடங்கி
இராச்சந்திப்பு வரை
தாவணி தவிர்த்து
நேற்றிரவு திருடிய
உன்சட்டைகளையே
அணியப்போகிறேன்.
கடிவாளம் போட்டுக்கொள்.
அல்லது கண்களை மூடிக்கொள்.
நீயென் இடப்பக்கம்
நடக்கும் போதெல்லாம்
என் இதயம் இடமாறுதல்
கேட்கிறது.
துப்பட்டா செய்த பாவம்
உன் தொடுதலில்
தொலையுமென்றால்
சொல்லி விடு
சுடிதாரே அணிகிறேன்.
அருகில் வா.
ஒரு ஆசை சொல்கிறேன்.
தாவணி நாட்களில் நீ என்
வலப்பக்கம் வர வேண்டாம்.
கவிதாயினி எழில்விழி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக