# இசைக்கலைஞன் #
அடேய் சரவணா ..........
ஒரு தேர்ந்த இசைக்கலைஞனாய் நீ
என்னை கையாள்கிறாய்
என்னில் இத்தனை இசைக்கருவிகள்
இருப்பதை உனக்கு யார் சொன்னது?
என்னை கையாள்கிறாய்
என்னில் இத்தனை இசைக்கருவிகள்
இருப்பதை உனக்கு யார் சொன்னது?
என்னை தோல் கருவியாக்கி
தீம்தரிகிட செய்கிறாய்
துளை கருவிகளில் விரல் பொருத்தி
துள்ளியோட வைக்கிறாய்.
தீம்தரிகிட செய்கிறாய்
துளை கருவிகளில் விரல் பொருத்தி
துள்ளியோட வைக்கிறாய்.
கவிதைகளில் களையெடுப்பதாய்
தலையில் குட்டுகிறாய்.
செண்டை மேளமா இதுவென்று
சண்டை போடுகிறேன்.
ஆனாலும் அந்த கண நாதத்தில்
கலந்து நான் கரைகிறேன்.
தலையில் குட்டுகிறாய்.
செண்டை மேளமா இதுவென்று
சண்டை போடுகிறேன்.
ஆனாலும் அந்த கண நாதத்தில்
கலந்து நான் கரைகிறேன்.
உன்னை பார்க்காதது போல்
தாண்டிச்செல்கிறேன்.
பின்னிடை பிட்டத்தில்
மத்தளம் வாசித்து
மறைந்து கொள்கிறாய்.
தாண்டிச்செல்கிறேன்.
பின்னிடை பிட்டத்தில்
மத்தளம் வாசித்து
மறைந்து கொள்கிறாய்.
திருவிழா கூட்டத்தில்
மூச்சு உரசும் தூரத்தில்
நெரிசலில் தொடுவதாய்
புஜங்களில்மிருதங்கம் வாசித்து
மிருதுவாய் வருடுகிறாய்.
மூச்சு உரசும் தூரத்தில்
நெரிசலில் தொடுவதாய்
புஜங்களில்மிருதங்கம் வாசித்து
மிருதுவாய் வருடுகிறாய்.
எதிரில் வருகிறேன். நீ
முன்னழகை முறைப்பதில்
என்னுள் தபேலா வாசித்து
என்னை தடுமாற வைக்கிறாய்.
முன்னழகை முறைப்பதில்
என்னுள் தபேலா வாசித்து
என்னை தடுமாற வைக்கிறாய்.
வெளஞ்சநெல்லு வரப்புக்குள்ளே
வீணையாய் என்னை மடியமர்த்தி
நெகிழ்ந்த தாவணி சீர்திருத்தி
என் தந்திகளை முறுக்குகிறாய்
நான் காம்போதியில் கரைகிறேன்.
வீணையாய் என்னை மடியமர்த்தி
நெகிழ்ந்த தாவணி சீர்திருத்தி
என் தந்திகளை முறுக்குகிறாய்
நான் காம்போதியில் கரைகிறேன்.
மற்றொரு நாள் அதேயிடத்தில்
என் இதழ்கடித்து உறிஞ்சுகிறாய்.
நாதஸ்வர சீவாளியாய் நாக்கால்
ஒரு நர்த்தனம் ஆடுகிறாய்.
என் இதழ்கடித்து உறிஞ்சுகிறாய்.
நாதஸ்வர சீவாளியாய் நாக்கால்
ஒரு நர்த்தனம் ஆடுகிறாய்.
செவிமடல் கடிக்கும் போதே
மறு செவியில் துளையடைக்கிறாய்.
புல்லாங்குழலில் ஒரு
புன்னாகவராளி கேட்கிறது.
மறு செவியில் துளையடைக்கிறாய்.
புல்லாங்குழலில் ஒரு
புன்னாகவராளி கேட்கிறது.
என் மூக்குத்துளையில் உன்
மூச்சுக்காற்று நுழைகிறது.
மகுடிதுளை நுழைந்த காற்றில்
காதல் நாகம் படமெடுத்து ஆடுகிறது.
மூச்சுக்காற்று நுழைகிறது.
மகுடிதுளை நுழைந்த காற்றில்
காதல் நாகம் படமெடுத்து ஆடுகிறது.
அடேய் சரவணா .............
எத்தனை ஸ்வரங்களில் நீ
என்னை இசைத்தாலும் என்னால்
என்ன செய்து விட முடியும்.?
உனக்கு
ஒத்து ஊதுவதைத் தவிர.
எத்தனை ஸ்வரங்களில் நீ
என்னை இசைத்தாலும் என்னால்
என்ன செய்து விட முடியும்.?
உனக்கு
ஒத்து ஊதுவதைத் தவிர.
கவிதாயினி எழில்விழி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக