# அங்கேயும் காதல் #
எதிர் வீட்டு எசக்கி மவ செல்லி
எனக்கு இரண்டு வருசம் முந்தியே
வயசுக்கு வந்திருந்தா.
அவ வீட்டு கிழக்கு மூலைல
அந்த நாளுக்கான குடிசைல
இப்போதெல்லாம்
எப்போதாவது சில மாசம்
எனக்கும் இடம் கிடைக்கும்.
எனக்கு இரண்டு வருசம் முந்தியே
வயசுக்கு வந்திருந்தா.
அவ வீட்டு கிழக்கு மூலைல
அந்த நாளுக்கான குடிசைல
இப்போதெல்லாம்
எப்போதாவது சில மாசம்
எனக்கும் இடம் கிடைக்கும்.
வயசுப் பொண்ணுங்க
வலி மறக்க வம்பளப்போம்.
சுவத்துக்கும் கேக்காம
வலி மறந்து குதுகலிப்போம்.
எல்லாமும் சொன்ன செல்லி அந்த
எழவெடுத்த காதல மட்டும்
எங்கிட்ட சொன்னதில்ல.
அதுக்கெல்லாம் இவ சரிப்பட்டு
வர மாட்டானு நெனச்சிட்டா போல.
வலி மறக்க வம்பளப்போம்.
சுவத்துக்கும் கேக்காம
வலி மறந்து குதுகலிப்போம்.
எல்லாமும் சொன்ன செல்லி அந்த
எழவெடுத்த காதல மட்டும்
எங்கிட்ட சொன்னதில்ல.
அதுக்கெல்லாம் இவ சரிப்பட்டு
வர மாட்டானு நெனச்சிட்டா போல.
கத்திரிக்கா முத்திச்சு - ஒரு நாளு
கடைத்தெருவுக்கும் வந்திச்சு.
செல்வத்துக்கு ராத்திரியும்
செல்லிக்கு பகல்லயும்
வெட்டு விமுந்துச்சி.
சொந்தம் பதறிச்சு - எழவு கூட
சொல்லியும் விட்டிருச்சி.
கடைத்தெருவுக்கும் வந்திச்சு.
செல்வத்துக்கு ராத்திரியும்
செல்லிக்கு பகல்லயும்
வெட்டு விமுந்துச்சி.
சொந்தம் பதறிச்சு - எழவு கூட
சொல்லியும் விட்டிருச்சி.
அன்னிக்கு தான் சரவணன்
ஊருக்கு வந்திருந்தான்.
அள்ளிப் போட்டு கொண்டு போய்
ஆஸ்பத்திரில பொழைக்க வச்சான்.
ஊருக்குள்ள நியாயம் வச்சான்.
ஒண்ணொன்னா சொல்லி வச்சான்.
சாதி மட்டும் வேறன்னா
சாவணுமானும் கேட்டு வச்சான்.
ஊருக்கு வந்திருந்தான்.
அள்ளிப் போட்டு கொண்டு போய்
ஆஸ்பத்திரில பொழைக்க வச்சான்.
ஊருக்குள்ள நியாயம் வச்சான்.
ஒண்ணொன்னா சொல்லி வச்சான்.
சாதி மட்டும் வேறன்னா
சாவணுமானும் கேட்டு வச்சான்.
வேணான்டா மாப்ள - எங்கயாச்சும்
ஓடிப்போய் பொழச்சுக்க சொல்லு.
விசயத்த சொல்லி விரல் மோதிரம்
கழட்டி குடுத்து இரண்டு மணி
இரயிலு வண்டி ஏத்திவிட்டு
திரும்பி வந்தான்.
மூணு மணிக்கு இரண்டு பேரும்
சேலையில முடிச்சிட்டு
அய்யனாரு ஆலமரத்துல
தொங்கிட்டு செத்தாங்க.
ஓடிப்போய் பொழச்சுக்க சொல்லு.
விசயத்த சொல்லி விரல் மோதிரம்
கழட்டி குடுத்து இரண்டு மணி
இரயிலு வண்டி ஏத்திவிட்டு
திரும்பி வந்தான்.
மூணு மணிக்கு இரண்டு பேரும்
சேலையில முடிச்சிட்டு
அய்யனாரு ஆலமரத்துல
தொங்கிட்டு செத்தாங்க.
அட அய்யனாரே.
இந்த எழவெடுத்த சாதிய
என்னிக்குத் தான் தூக்கி பொதைக்கப் போறே.
இப்போதெல்லாம் எனக்கும் சரவணனுக்கும்
பத்திக்கிட்ட நெருப்ப அந்த ஆலமர
காத்து தான் அப்பப்ப அணைக்குது.
ஆனாலும் ரயில் வெளிச்சம் எங்கள
யாருன்னு தெரியாம
ஊருக்கு வெளிச்சம் போடுது.
இந்த எழவெடுத்த சாதிய
என்னிக்குத் தான் தூக்கி பொதைக்கப் போறே.
இப்போதெல்லாம் எனக்கும் சரவணனுக்கும்
பத்திக்கிட்ட நெருப்ப அந்த ஆலமர
காத்து தான் அப்பப்ப அணைக்குது.
ஆனாலும் ரயில் வெளிச்சம் எங்கள
யாருன்னு தெரியாம
ஊருக்கு வெளிச்சம் போடுது.
இந்த கத்திரிக்காவும் முத்திச்சு.
கடைத்தெருவுக்கு கொண்டு வர
ரகசிய தீர்மானம் ராத்திரில முடிஞ்சது.
மைனர் தலைமைல ராத்திரி
புடிக்க போறாங்களாம்.
எங்களுக்குத்தான் கண்ணில்லையே.
எப்பவும் போல ஆலமரக்காத்துல
அணைஞ்சி கிடந்தோம்.
கடைத்தெருவுக்கு கொண்டு வர
ரகசிய தீர்மானம் ராத்திரில முடிஞ்சது.
மைனர் தலைமைல ராத்திரி
புடிக்க போறாங்களாம்.
எங்களுக்குத்தான் கண்ணில்லையே.
எப்பவும் போல ஆலமரக்காத்துல
அணைஞ்சி கிடந்தோம்.
பிரியறப்ப திரும்பி பார்த்தோம்.
இளவட்டங்க எங்களப் பாத்ததும்
ஊரப்பாத்து ஓடுனாங்க.
ஒண்ணுமே தெரியாம ஊருக்குள்ள
வந்துட்டோம்.
மறுநாள் காலைல மைனரு
ரத்தம் கக்கி செத்துட்டாரு.
காரணம் என்னன்னு
ஊரே சொல்லிச்சு.
செல்வமும் செல்லியும் ராத்திரி
ஊருக்கு வந்தாங்களாம்.
இளவட்டங்க எங்களப் பாத்ததும்
ஊரப்பாத்து ஓடுனாங்க.
ஒண்ணுமே தெரியாம ஊருக்குள்ள
வந்துட்டோம்.
மறுநாள் காலைல மைனரு
ரத்தம் கக்கி செத்துட்டாரு.
காரணம் என்னன்னு
ஊரே சொல்லிச்சு.
செல்வமும் செல்லியும் ராத்திரி
ஊருக்கு வந்தாங்களாம்.
நீங்க யாராச்சும் பாத்தீங்களா?
கவிதாயினி எழில்விழி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக