வெள்ளி, 24 மார்ச், 2017

# " மைக்கேல் பார்ரடே " மனைவிக்கு சமர்ப்பணம். #
ஒரு நாள் இரவு,
எனக்கு துணையாய் இருட்டு .
என்னோடு இணையாய் தனிமை.
இரண்டுக்கும் பகையாய்
அவன் ஆய்வுக்கு நான்
உதவவில்லை என்ற
ஆதாரமில்லா வெறுமை.
எங்களுக்குள் ஊடல்.
ஆனாலும் அன்றிரவு
என்னை அருமையாய் சுகித்தான்.
கேட்டேன் - ஆராய்ச்சி?
சொன்னான் - முடிந்தது.
சிரித்தபடி விலகிப்படுத்தான்.
ஆராய்ச்சியில் வெற்றி .
வெள்ளோட்டத்தில் பெரு விலை .
அரங்கத்தில் கரவொலி
அன்பளிப்பாய் பூமாலை .
அதற்கும் மேலே பணமழை்
அன்றிரவு என்னை
அளவுக்கதிகமாய் புணர்ந்தான்.
முடித்துவிட்டு விலகிப் படுக்கவில்லை.
இப்போதும்
கேட்டேன்.- ஆராய்ச்சி?
சொன்னான் - முடித்துவிட்டேன்.
கேட்டேன் - எப்படி?
நீ என்னை கைகளால்
மட்டுமல்ல
கால்களாலும்
அணைத்துக் கொண்டாயல்லவா?
ஆமாம்.
அது தான்
காப்பிடப்பட்ட கம்பிச்சுருள் ..
ம். அப்புறம்.?
உன் ஆலிங்கனத்துக்குள்
சுழன்று கொண்டிருந்தேனல்லவா?
ஆமாம்'
நான் தான்
"தேனிரும்பு" துண்டு.
கம்பிச்சுருளில் நான்
காதலை செலுத்தினேன்.
ஸ்லோ ஸ்பீடு பார்முலா வந்தது.
காமத்தை செலுத்தினேன்.
ஹை ஸ்பீடு பார்முலா வந்தது.
சிரித்தபடி சொன்னேன்.
உன் சாரம் என் சாரம்.
என்னில்
தேன் குடித்தபடி சொன்னான்.
ஆமாம்"
# சம்சாரம் அது மின்சாரம் #
கவிதாயினி எழில்விழி |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக