# விஷம் #
அவள் விழிகள் திறந்திருந்தால்
நான் தான் அவள் உலகம்.
அவள் விழிகள் மூடிக்கொண்டால்
அவள் மட்டுமே என் உலகம்.
நான் தான் அவள் உலகம்.
அவள் விழிகள் மூடிக்கொண்டால்
அவள் மட்டுமே என் உலகம்.
அந்த உலகம் எனக்கு ரெம்ப பிடிக்கும்.
என் முத்தம் வேண்டியே
அந்த உலகம் அடிக்கடி
தன்னை மூடிக் கொள்ளும்.
என் முத்தம் வேண்டியே
அந்த உலகம் அடிக்கடி
தன்னை மூடிக் கொள்ளும்.
எங்கள் ஊர்க்குளத்தின்
எல்லாமீன்களும்
சொல்லிக் கொண்டன.
அவளுக்கொரு
முத்தம் கொடுத்தால்
தனக்கு முக்தி உண்டு
எல்லாமீன்களும்
சொல்லிக் கொண்டன.
அவளுக்கொரு
முத்தம் கொடுத்தால்
தனக்கு முக்தி உண்டு
ஒட்டுக் கேட்டருந்த
அந்த தண்ணிப்பாம்புக்கும்
ஆசை வந்து
அவள் முழுகும் போது
உதட்டில் முத்தம் கொடுத்து
பரம்பரைக்கே முக்தி பெற்றது.
அந்த தண்ணிப்பாம்புக்கும்
ஆசை வந்து
அவள் முழுகும் போது
உதட்டில் முத்தம் கொடுத்து
பரம்பரைக்கே முக்தி பெற்றது.
கரையேறியவள் பாம்பு
உதட்டில் கடித்ததாய் கூறி
மடிதாங்க நானிருப்பதால்
மயங்கி சாய்ந்தாள்.
உதட்டில் கடித்ததாய் கூறி
மடிதாங்க நானிருப்பதால்
மயங்கி சாய்ந்தாள்.
விசம் எடுக்க எங்களுக்கும் தெரியுமே.
கயிறாக கைக்கொண்டு
களுத்திறுக்கி கட்டிக்கொண்டு
விசம் எடுத்த வித்தியாசத்தில்
விழிகள் அன்றும் மூடியதுண்டு.
கயிறாக கைக்கொண்டு
களுத்திறுக்கி கட்டிக்கொண்டு
விசம் எடுத்த வித்தியாசத்தில்
விழிகள் அன்றும் மூடியதுண்டு.
விசம் இறக்கிய கிறக்கத்தில்
விழிகள் திறந்து எழுந்து கொண்டு
"படுபாவி, படுபாவி "
"உனக்கு அந்தப்பாம்பே ஓரளவு தேவல "
சொல்லி விட்டு, சிரித்தபடி செல்கிறது
என்னிடம் மட்டும் சீறத்தெரியாத
அந்த என் பெண் நாகம்.
விழிகள் திறந்து எழுந்து கொண்டு
"படுபாவி, படுபாவி "
"உனக்கு அந்தப்பாம்பே ஓரளவு தேவல "
சொல்லி விட்டு, சிரித்தபடி செல்கிறது
என்னிடம் மட்டும் சீறத்தெரியாத
அந்த என் பெண் நாகம்.
நான் அந்த செல்லப்பாம்பை
தேடிக் கொண்டு இருக்கிறேன்.
நீங்களாவது பார்த்தால் - அதற்கு
என் நன்றியை சொல்லுங்கள்.
தேடிக் கொண்டு இருக்கிறேன்.
நீங்களாவது பார்த்தால் - அதற்கு
என் நன்றியை சொல்லுங்கள்.
கவிதாயினி நாயகன் சரவணன் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக