# ஒரு குளமும் பல வானங்களும் #
எங்கள் ஊர் எல்லையில்
என் பார்வைக்கு மட்டும்
பாசி படர்ந்து
எப்போதும் நிரம்பி வழியும்
குளம் ஒன்று இருக்கிறது.
என் பார்வைக்கு மட்டும்
பாசி படர்ந்து
எப்போதும் நிரம்பி வழியும்
குளம் ஒன்று இருக்கிறது.
அதில் என்னைப் போல
பக்கத் துடுப்புகள் இன்றி
நீந்தும் சில மீன்களும்...
என்னை போல உயிர்
நீண்டு வாழும்
சில ஆமைகளும் உண்டு.
பக்கத் துடுப்புகள் இன்றி
நீந்தும் சில மீன்களும்...
என்னை போல உயிர்
நீண்டு வாழும்
சில ஆமைகளும் உண்டு.
கத்தி கத்தியே தன்
சாவுக்கு அச்சாரம்
போட்ட பல தவளைகள்
இருக்கின்றன.
பார்வையில் அழகான
என் போல் சில பாம்புகளும்
கூட இருக்கின்றன....
சாவுக்கு அச்சாரம்
போட்ட பல தவளைகள்
இருக்கின்றன.
பார்வையில் அழகான
என் போல் சில பாம்புகளும்
கூட இருக்கின்றன....
நிலவுக்கே மலர்ந்து
விடும் என்போல்
இதழ்கள் அற்ற
பல தாமரைகள் உண்டு
விடும் என்போல்
இதழ்கள் அற்ற
பல தாமரைகள் உண்டு
இத்தனைக்கும் மேலாக
என்னைப்போல வாடிய
அல்லிகளும் சற்று
நிறையவே உண்டு.
என்னைப்போல வாடிய
அல்லிகளும் சற்று
நிறையவே உண்டு.
குளம் வற்றும்,
கொத்திவிடலாம் என்றே
சில கழுகுகளும்
ஒற்றைக் கால் தவத்தில்
சில கொக்குகளும் கூட
காத்திருக்கிறது.
கொத்திவிடலாம் என்றே
சில கழுகுகளும்
ஒற்றைக் கால் தவத்தில்
சில கொக்குகளும் கூட
காத்திருக்கிறது.
இவற்றிற்கு மத்தியில்
வற்றாமல் நிரம்பியிருக்கும்
மனக்குளத்திற்குள் விழுந்து
கிடக்கிறது என் வானம்.
நீருக்குள் மட்டுமே
வாழ்கிறது அது பாவம்.
வற்றாமல் நிரம்பியிருக்கும்
மனக்குளத்திற்குள் விழுந்து
கிடக்கிறது என் வானம்.
நீருக்குள் மட்டுமே
வாழ்கிறது அது பாவம்.
பிம்பங்களில்
வாழ்ந்து கொள்ளும்
என்மனக்குளத்தை
ஒரு முறை
தூர் வாரிக் கொள்கிறேன்.
பளிங்கு தண்ணீர் விட்டு
சில பாவங்களை
கழுவிக் கொள்கிறேன்.
வாழ்ந்து கொள்ளும்
என்மனக்குளத்தை
ஒரு முறை
தூர் வாரிக் கொள்கிறேன்.
பளிங்கு தண்ணீர் விட்டு
சில பாவங்களை
கழுவிக் கொள்கிறேன்.
அடேய் சரவணா.......
உன் நினைவுக்கல்லெறிந்து
என்னில் அலையாக
ஆர்ப்பரியேன்.
அத்தனையும் அடங்கட்டும்.
உன் நினைவுக்கல்லெறிந்து
என்னில் அலையாக
ஆர்ப்பரியேன்.
அத்தனையும் அடங்கட்டும்.
கவிதாயினி எழில்விழி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக