# அரணா கொடியும் அரை மூடியும் #
கருகமணி கட்டிவிட்டு - அது
உரசும் இடம் பற்றி
காமம் பேச தெரிந்த நீ
கண்களில் மட்டும் காதல் காட்டுகிறாய்.
உனக்கு தேவை காதலா? காமமா?
எனக்கா? இரண்டும்தான் வேண்டும்.
உரசும் இடம் பற்றி
காமம் பேச தெரிந்த நீ
கண்களில் மட்டும் காதல் காட்டுகிறாய்.
உனக்கு தேவை காதலா? காமமா?
எனக்கா? இரண்டும்தான் வேண்டும்.
பாசிமணி வாங்கிதந்து _ அதில்பாதி நானென்று சொன்னாலும் சொன்னாய்,
போடுவதா? வேண்டாமா?
வெட்கத்தில் நான்,
உரச மாட்டேன் என்று சொல்லேன்.
உரிமையோடு போட்டுக்கறேன்.
போடுவதா? வேண்டாமா?
வெட்கத்தில் நான்,
உரச மாட்டேன் என்று சொல்லேன்.
உரிமையோடு போட்டுக்கறேன்.
"இந்தாடி மஞ்சத் துண்டு - பூசிக்குளி "
"மஞ்சளுக்குள் நானிருக்கேன் "
கொடுத்து செல்கிறாய்.
பூசுனத காட்டுடின்னு
விடியலுக்கு முன்ன பாக்க வருவே
வர மாட்டேன்னு சொல்லி விடு - நான்
உடல் முழுக்க பூசிக்கறேன்.
"மஞ்சளுக்குள் நானிருக்கேன் "
கொடுத்து செல்கிறாய்.
பூசுனத காட்டுடின்னு
விடியலுக்கு முன்ன பாக்க வருவே
வர மாட்டேன்னு சொல்லி விடு - நான்
உடல் முழுக்க பூசிக்கறேன்.
கங்கணம் கட்டிக்கொண்டு ' நீ -
வாங்கிதந்த பட்டியலில்
சின்ன மணிபர்ஸ் தொடங்கி
உள்ளாடை வரை அடக்கம்.
அட. அடங்காதவனே,
அறைக்குள்ள அதுகளோடதான்
அன்னாடம் வாழ்ந்துக்கறேன்.
வாங்கிதந்த பட்டியலில்
சின்ன மணிபர்ஸ் தொடங்கி
உள்ளாடை வரை அடக்கம்.
அட. அடங்காதவனே,
அறைக்குள்ள அதுகளோடதான்
அன்னாடம் வாழ்ந்துக்கறேன்.
அடேய் சரவணா .......
இதுவரைக்கும் நீ தந்ததெல்லாம்
காலப்போக்கில் உருமாறி உருமாறி
காதலுக்கும் காமத்துக்கும் எனக்கு
அர்த்தம் சொல்லி,
காணாமலும் போயிருச்சி .
இதுவரைக்கும் நீ தந்ததெல்லாம்
காலப்போக்கில் உருமாறி உருமாறி
காதலுக்கும் காமத்துக்கும் எனக்கு
அர்த்தம் சொல்லி,
காணாமலும் போயிருச்சி .
இருவது வயசுல நீ குடுத்த
இடுப்பு ஒட்டியாணம் மட்டும்.
காலப்போக்கில் உருமாறி
இடுப்புக்கொடியாகி என்னோடு
நம்ம காதல் பேசுது
ஒம்மவளுக்கு அரை மூடியாகி
நம்ம காமம் பேசுது.
இடுப்பு ஒட்டியாணம் மட்டும்.
காலப்போக்கில் உருமாறி
இடுப்புக்கொடியாகி என்னோடு
நம்ம காதல் பேசுது
ஒம்மவளுக்கு அரை மூடியாகி
நம்ம காமம் பேசுது.
கவிதாயினி எழில்விழி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக