# இசைப் பயணம் #
அடேய் சரவணா ...........
உன்னுடனான என் மீச்சிறு
பயணங்களை கூட நான்
கவிதையுடன் கடந்த போது
பயணங்களை பாடலாகவே எனக்குள்
அறிமுகம் செய்வித்தாய்.
பயணங்களை கூட நான்
கவிதையுடன் கடந்த போது
பயணங்களை பாடலாகவே எனக்குள்
அறிமுகம் செய்வித்தாய்.
உன் வாசல் கடக்கிறேன்
" இந்த புன்னகை என்ன விலை " என்கிறாய்.
என் சிரிப்பு உனக்கெப்படி தெரிந்தது.?
" உன் இதயம் சொன்ன விலை " தான்.
" இந்த புன்னகை என்ன விலை " என்கிறாய்.
என் சிரிப்பு உனக்கெப்படி தெரிந்தது.?
" உன் இதயம் சொன்ன விலை " தான்.
உன் வாசல் கடக்கிறேன்.
" ஏரிக்கரையின் மேலே " என்று
ஆரம்பிக்கிறாய்.
ஏரிக்குக்தானே? வந்து விடுகிறேன்
எத்தனை மணிக்கு என்பதை
உடல் மொழியால் உணர்த்துகிறாய்.
" ஏரிக்கரையின் மேலே " என்று
ஆரம்பிக்கிறாய்.
ஏரிக்குக்தானே? வந்து விடுகிறேன்
எத்தனை மணிக்கு என்பதை
உடல் மொழியால் உணர்த்துகிறாய்.
"தாமரை கன்னங்கள்
தேன் மலர் கிண்ணங்கள் "
உன் பாடலின் லயிப்பில்
நான் பறித்த தாமரையும்
என்னை கடித்திருந்த அட்டைப்பூச்சியும்
மயங்கித்தான் கிடக்கிறது.
தேன் மலர் கிண்ணங்கள் "
உன் பாடலின் லயிப்பில்
நான் பறித்த தாமரையும்
என்னை கடித்திருந்த அட்டைப்பூச்சியும்
மயங்கித்தான் கிடக்கிறது.
என்னைக் கடக்கிறாய்
உன் உதடுகளை கண்ணாக்கி
"பட்டத்து ராணி பார்க்கும் பார்வை"
என்னை பார்க்கச்சொல்கிறாய்.
மாலையில் வரும் போது
"வெற்றி மீது வெற்றி வந்து "
உன்னைச் சேர்ந்ததாக
உரக்கச் சொல்கிறாய்.
உன் உதடுகளை கண்ணாக்கி
"பட்டத்து ராணி பார்க்கும் பார்வை"
என்னை பார்க்கச்சொல்கிறாய்.
மாலையில் வரும் போது
"வெற்றி மீது வெற்றி வந்து "
உன்னைச் சேர்ந்ததாக
உரக்கச் சொல்கிறாய்.
உன்னுடனான என்
மீச்சிறு பயணங்களையும் என்
" விழியே கதை எழுது " என்றேன்.
கவிதைதான் எழுதியது.
எழுதிய ஒவ்வொரு கவிதையின் கீழும்
" காவியமா? நெஞ்சின் ஓவியமா?"
என்றுதான் கையெழுத்திடுகிறாய்.
மீச்சிறு பயணங்களையும் என்
" விழியே கதை எழுது " என்றேன்.
கவிதைதான் எழுதியது.
எழுதிய ஒவ்வொரு கவிதையின் கீழும்
" காவியமா? நெஞ்சின் ஓவியமா?"
என்றுதான் கையெழுத்திடுகிறாய்.
"கல்யாண நாள் பார்க்க " சொன்னாய்
என்னுள் கடலலை அளவு ஆசை.
" கையோடு கை சேர்க்கும் காலங்களே "
இப்போதல்லாம் என்னிதழில் வழிகிறது.
என்னுள் கடலலை அளவு ஆசை.
" கையோடு கை சேர்க்கும் காலங்களே "
இப்போதல்லாம் என்னிதழில் வழிகிறது.
ஆற்றுக்குளியலில் எனக்கு பின்னால் நீ
" தண்ணீர் சுடுவதென்ன ?" என்கிறாய்.
" நீராடும் கண்கள் இங்கே " பாடி
உன்னையும் துணைக்கு அழைக்கிறேன்.
" தண்ணீர் சுடுவதென்ன ?" என்கிறாய்.
" நீராடும் கண்கள் இங்கே " பாடி
உன்னையும் துணைக்கு அழைக்கிறேன்.
உனக்கு பயந்து குளியறைக்குள்
குளித்துக் கொள்கிறேன்.
என் உதடு கூட துரோகியாய் விடுகிறது.
" நீராடும் அழகெல்லாம் நீ மட்டும்
பார்க்க வா " என்றுன்னை
ரகசியமாய் அழைக்கிறது.
குளித்துக் கொள்கிறேன்.
என் உதடு கூட துரோகியாய் விடுகிறது.
" நீராடும் அழகெல்லாம் நீ மட்டும்
பார்க்க வா " என்றுன்னை
ரகசியமாய் அழைக்கிறது.
இப்போதெல்லாம் என்னிடமுள்ள
இசைத்தட்டுகளின்
எல்லாப் பக்கங்களிலும்
எல் ஆர் ஈஸ்வரியே இழைகிறார்.
" இது மாலை நேரத்து மயக்கம் "
என்று கிசுகிசுத்துப் போகிறார்.
இசைத்தட்டுகளின்
எல்லாப் பக்கங்களிலும்
எல் ஆர் ஈஸ்வரியே இழைகிறார்.
" இது மாலை நேரத்து மயக்கம் "
என்று கிசுகிசுத்துப் போகிறார்.
உன் மீதான காதலின் உரமறிந்து
அப்பன் கைச்சாட்டை என்
அடிவயிற்றில் அடித்த அன்று
" உன் கண்ணில் நீர் வழிந்தால் "
உன்னிதழில் இழைந்ததே ........
அந்த நொடி முதல் இந்த நொடி வரை
நான் அழுததே இல்லை.
ஆமாம்
உன் இறப்பிலும் கூட..
அப்பன் கைச்சாட்டை என்
அடிவயிற்றில் அடித்த அன்று
" உன் கண்ணில் நீர் வழிந்தால் "
உன்னிதழில் இழைந்ததே ........
அந்த நொடி முதல் இந்த நொடி வரை
நான் அழுததே இல்லை.
ஆமாம்
உன் இறப்பிலும் கூட..
கவிதாயினி எழில்விழி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக