# வாழலாம் வந்து விடு #
அடியேய் அழகுக் கண்ணு......
வானம் தாண்டிச்செல்ல
ஆசை எனக்கு,
வயல்வெளி தாண்ட
மனமில்லை உனக்கு.
வயலும் வானமும்
வாழ்வுக்கும் தேவைதான்.
வாழ்ந்தே விடுவோம்
வந்துவிடு எழில்விழி .........
ஆசை எனக்கு,
வயல்வெளி தாண்ட
மனமில்லை உனக்கு.
வயலும் வானமும்
வாழ்வுக்கும் தேவைதான்.
வாழ்ந்தே விடுவோம்
வந்துவிடு எழில்விழி .........
கடல் எனக்கு கடலளவு பிடிக்கிறது.
ஆறே உனக்கு
போதுமானதாக இருக்கிறது.
ஆறும் கடலும்
அனைவருக்கும் தேவைதான்.
அதனையும் தாண்டி சென்றோமானால்
ஒரு வாழ்வங்கே காத்திருக்கு.
வாழ்ந்தே விடுவோம்.
வந்துவிடு எழில்விழி.........
ஆறே உனக்கு
போதுமானதாக இருக்கிறது.
ஆறும் கடலும்
அனைவருக்கும் தேவைதான்.
அதனையும் தாண்டி சென்றோமானால்
ஒரு வாழ்வங்கே காத்திருக்கு.
வாழ்ந்தே விடுவோம்.
வந்துவிடு எழில்விழி.........
ஊரில் பெய்யும் மழையில்
உற்சாகம் எனக்கு.
வாசல் மழையே
போதும் உனக்கு,
ஊருக்கும் உனக்கும்
ஒரே மழைதான்.
வாசல் தாண்டியும்
பெய்யும் மழை நனைந்து
வாழ்ந்தே விடலாம்
வந்துவிடு எழில் விழி........
உற்சாகம் எனக்கு.
வாசல் மழையே
போதும் உனக்கு,
ஊருக்கும் உனக்கும்
ஒரே மழைதான்.
வாசல் தாண்டியும்
பெய்யும் மழை நனைந்து
வாழ்ந்தே விடலாம்
வந்துவிடு எழில் விழி........
,அத்தனை முத்தங்களிலும்
ஆசை எனக்கு.
உதட்டு முத்தமே
போதும் உனக்கு.
முத்தங்களால் முற்றுப்பெறாத
வாழ்க்கை இனி தேவையில்லை.
வாழ்ந்தே விடலாம்.
வந்துவிடு எழில்விழி........
ஆசை எனக்கு.
உதட்டு முத்தமே
போதும் உனக்கு.
முத்தங்களால் முற்றுப்பெறாத
வாழ்க்கை இனி தேவையில்லை.
வாழ்ந்தே விடலாம்.
வந்துவிடு எழில்விழி........
காமமும் தாண்டும்
உணர்வெனக்கு நீ
காதல் தாண்டா
உணர்வுனக்கு நான்.
காதலும் தாண்டி
காமமும் தாண்டி
கரையேறிச்சென்று
கடந்தே விடுவோம்.
அந்த வாழ்வையும்
வாழ்ந்தே விடுவோம்
வந்துவிடு எழில்விழி. ...........
உணர்வெனக்கு நீ
காதல் தாண்டா
உணர்வுனக்கு நான்.
காதலும் தாண்டி
காமமும் தாண்டி
கரையேறிச்சென்று
கடந்தே விடுவோம்.
அந்த வாழ்வையும்
வாழ்ந்தே விடுவோம்
வந்துவிடு எழில்விழி. ...........
கவிதாயினி நாயகன் சரவணன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக