வெள்ளி, 24 மார்ச், 2017

# நீ எங்கே? #
அடேய் சரவணா .........
எனக்குத் தெரியும் 
நீ
மாதமொரு உள்ளாடை
வாங்கி விடுகிறாய்.
எனக்கும் சேர்த்து .
குளிக்கும் துறை கல்லுக்குள்
வைத்து விட்டு செல்கிறாய்.
எனக்கு உன்னை விட்டு
பிரிய மனமில்லை.
துவைத்து வைத்த உன்
துணிகளில் இருந்து உன்
ஒற்றை உள்ளாடை
திருடிச் செல்கிறேன்.
இப்போதெல்லாம் நீ
ஒற்றை உள்ளாடையும் துறந்து
இடுப்புத்துண்டோடு
குளமிறங்குகிறாய்,
அதையும் களவாட முடிவு கொண்டு
மூடிய கண்களுடன் நான்
களமிறங்குகிறேன்.
விலகுவதாய் நடித்து
ஆழத்திற்கு இட்டு செல்கிறாய்
அசரவில்லை நான்.
கடித்தேனும் பிடுங்கி விடுவேன்.
பயந்து கழற்றியே
கொடுத்து விட்டாய்.
ஜெயித்து விட்டேன்.
வெற்றிக் களிப்போடு
நெற்றியில் சுற்றிக் கொண்டு
கரையேறி செல்கிறேன்.
நான் கட்டியிருந்த
தாவணியை காணவில்லை.
அடேய், சரவணா .......
திரும்பி பார்க்கிறேன்
உன்னையும் காணவில்லை.
கவிதாயினி எழில்விழி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக